வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து பருகுவது ஆபத்தா?
உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் தினமும் காலையில் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
எலுமிச்சையில் வைட்டமின் சி, பிளாவனாய்டுகள், பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளன. இதனுடன் தேன் சேருவது உடலுக்கு நன்மையே தரும்.
இருப்பினும் இதில் சில பக்கவிளைவுகளும் உண்டு என கூறுகின்றார்கள். குறிப்பாக இதனை எடுத்து கொள்ளும் போது ஒரு சில விஷயங்களை நாம் கடைபிடிக்க வேண்டும். சிலர் இந்த பானத்தை எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும். தற்போது அதனை பார்ப்போம்.
[JZYQMCஸ
யாரெல்லாம் பருகக்கூடாது?
- பலவீனமான பற்கள், பலவீனமான எலும்புகள், வாய் புண்கள் போன்றவை இருந்தால் இந்த பானத்தை பருகக்கூடாது.
- கீல்வாதம், அசிட்டிட்டி பிரச்சினை கொண்டவர்களும் உட்கொள்ளக்கூடாது.
கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன?
- தண்ணீர் மிகவும் சூடாக இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் தேனை சூடான நீரில் சேர்த்தால் நச்சுத்தன்மை கொண்டதாக மாறிவிடும்.
- தண்ணீர் ஓரளவுக்கு சூடு குறைந்து வெதுவெதுப்பாக இருக்கும் சமயத்தில்தான் தேன் கலக்க வேண்டும். ஒரு டேபிள்ஸ்பூனுக்கு அதிகமாக தேன் சேர்ப்பதும் கூடாது.
- எலுமிச்சை பழத்தில் பாதியைத்தான் பயன்படுத்த வேண்டும். உங்கள் உடலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றால் முழுப்பழத்தையும் சாறு பிழிந்து கொள்ளலாம்.
முக்கிய குறிப்பு
இந்த பானத்தை பருகியதும் எந்த அசவுரியமும் ஏற்படாது. குறிப்பாக நெஞ்செரிச்சல் உண்டாகாது. பற்களில் கூச்சமோ, புளிப்பு தன்மையோ தென்பட்டால் வாய் புண்ணுக்கு வழி வகுத்துவிடும். ஏதேனும் வித்தியாசமாகவோ, சங்கடமாகவோ, உணர்ந்தால் இந்த பானத்தை தவிர்க்க வேண்டும்.