காபூல் விமான நிலையத்தில் கொடூர தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.(கே) உடன் யார்.. யாருக்கு தொடர்பு இருக்கிறது? வெளிச்சத்திற்கு வந்த பகீர் தகவல்
காபூல் விமான நிலையத்தில் கொடூர தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ்.(கே) பின்னணியில் யார்.. யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது குறித்து ஆப்கானிஸ்தான் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே பகீர் தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
வியாழக்கிழமை காபூல் விமான நிலையத்திற்கு படையெடுத்து வந்த ஆப்கானியர்கள் மீது இரண்டு இரு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டது.
இந்த கொடூர தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ் குழுவின் கிளை அமைப்பான ஐ.எஸ்.(கே) காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நடந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில், ஐ.எஸ்.-கேவுக்கும், தாலிபனுக்கும் தொடர்பு இருப்பதாக ஆப்கானிஸ்தான் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே பகீர் தகவல் ஒன்றை ட்விட்டதில் பதிவிட்டுள்ளார்.
ஐ.எஸ்.-கேவுக்கும், தாலிபன்கள் மற்றும் குறிப்பாக காபூலில் இயங்குகின்ற ஹக்கானி நெட்வொர்கிற்கும் இடையே தொடர்பு இருக்கிறது என்பதை எங்களிடம் இருக்கும் ஒவ்வொரு ஆதாரமும் காட்டுகிறது.
ஐஎஸ்ஐஎஸ் உடனான தொடர்பை தாலிபன்கள் மறுப்பது, Quetta Shura உடனான தொடர்பை பாகிஸ்தான் மறுப்பது போன்றததாகும்.
Every evidence we have in hand shows that IS-K cells have their roots in Talibs & Haqqani network particularly the ones operating in Kabul. Talibs denying links with ISIS is identical/similar to denial of Pak on Quetta Shura. Talibs hv leanred vry well from the master. #Kabul
— Amrullah Saleh (@AmrullahSaleh2) August 27, 2021
எஜமானிடமிருந்து (பாகிஸ்தான்) தாலிபன்கள் நன்றாக பாடம் கற்றிருக்கிறார்கள் என ஆப்கானிஸ்தான் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே தெரிவித்துள்ளார்.