இளவரசர் பிலிப் மரணத்திற்கு இதுவும் ஒரு காரணமாக? பிரபல ஊடக தொகுப்பாளர் சொல்லும் தகவல்
ஹாரி மற்றும் மேகன் நேர்காணலைப் பார்த்து, இளவரசர் பிலிப்பிற்கு மன அழுத்தம் ஏற்பட்டிருக்கலாம், இதன் காரணமாக அவர் நோயில் இருந்து மீள்வதை தடுத்திருக்கலாம் என்று பிரபல தொகுப்பாளர் பிரையன் கில்மீட் கூறியுள்ளார்.
இளவரசர் பிலிப் சமீபத்தில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், லண்டனில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து சில நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர், அதன் பின் அரண்மனைக்கு திரும்பினார். ஆனால் அவர் மருத்துவமனையில் இருந்த போது தான், கடந்த மார்ச் மாதம் 7-ஆம் திகதி ஹாரி மற்றும் மேகன் நேர்காணல் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அதில், அவர்கள் அரச குடும்பத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த பிரச்சனை எல்லாம் தீர்த்து வைக்கப்படும் என்று மகாராணி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது பிலிப் உயிரிழந்த நிலையில், Fox News தொலைக்காட்சியில், Fox & Friends என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் Brain Kilmeade என்பவர், இளவரசர் பிலிப் மருத்துவமனையில் இருந்த போது, இவர்களின் நேர்காணல் பிலிப்பிற்கு மன அழுத்தத்தை கொடுத்திருக்கலாம்.
அதுவே அவருடைய சமீபத்திய நோயில் இருந்து மீள்வதை தடுத்திருக்கலாம் என்று கூறினார். மேலும், ஹாரி மற்றும் மேகன் நேர்காணலைக் கண்டு பிலிப் கோபமடைந்ததாக ஏற்கனவே செய்தி வெளியாகியிருந்தது.
அதையும் அவர் குறிப்பிட்டு கூறினார். அதுமட்டுமின் குட்மார்னிங் பிரிட்டன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பியர்ஸ் மோர்கன் கூட, பிலிப் மருத்துவமனையில் இருக்கும் நிலையில், இது போன்ற நேர்காணல் தேவையா என்று கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.