ஆப்கன் மசூதியில் நடந்த குண்டு வெடிப்புக்கு இவர்கள் தான் காரணம்! வெளியான முக்கிய தகவல்
ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதி ஒன்றில் நேற்று குண்டு வெடித்ததில் 55 பேர் பலியாகியுள்ள சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானில் அமெரிக்க படைகள் வெளியானதை தொடர்ந்து நாடு முழுவதும் தாலிபான்கள் வசம் சென்றுவிட்டது. அன்றில் இருந்து இன்று வரை பெண்களுக்கு புது புது கட்டுப்பாடுகளை கடுமையாக்கி வருகின்றனர்.
கடந்த 15ஆம் திகதி தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து அங்கு குண்டு வெடிப்பு சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. முஸ்லிம் இனத்தவர்களுக்குள்ளே மோதல் ஏற்பட்டு வருகின்றன.
ஆப்கானில் வாழும் ஷியா பிரிவு இனத்தவர் மீது அடிக்கடி தாக்குதல் நடப்பது வழக்கம். இந்நிலையில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகமாகி வசிக்கும் குண்டூஸ் நகரில் உள்ள மசூதியில் நேற்று குண்டு வெடி தாக்குதல்கள் நடைபெற்றன.
இதில் உடல் சிதறி ஏராளமானோர் பரிதாபமாக பலியாகினர். இந்நிலையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
அது மட்டும் இல்லாமல் தங்களின் தற்கொலைபடை பயங்கரவாதிகள் உடலில் வெடிகுண்டுடன் மசூதிக்குள் நுழைந்து இந்த சம்பவத்தை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.