பல நாடுகளிலிருந்து பிரபல நாட்டிற்கு படையெடுக்கும் ஐ.எஸ் போராளிகள்! ரஷ்யா வெளியிட்ட பரபரப்பு தகவல்
உலகை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ் போராளிகள் குறித்து ரஷ்ய முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
மே மாதத்தில் சர்வதேச படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து விலகத் தொடங்கியதைத் தொடர்ந்து அந்நாட்டில் தலிபான் தனது தாக்குதலை முடுக்கிவிட்ட நிலையில், சமீபத்திய வாரங்களில் ஆப்கானிஸ்தானில் வன்முறை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தோஹாவில் தலிபானும் அமெரிக்காவும் அடைந்த ஒப்பந்தத்தின் ஒரு அம்சமாக படைகள் திரும்பப் பெறப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சிரியா, லிபியா மற்றும் பல நாடுகளில் இருந்து ஐ.எஸ் போராளிகள் ஆப்கானிஸ்தானுக்கு நகர்கின்றனர் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் Sergei Shoigu-வை மேற்கோளிட்டு Interfax செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து ஏதேனும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால், ரஷ்யா தனது நட்பு நாடான தஜிகிஸ்தானுக்கு தனது தளத்திலிருந்து இராணுவ உதவியை வழங்கும் என்று Shoigu கூறியுள்ளார்.