மலேசியாவின் புதிய பிரதமராக துணை பிரதமர் சப்ரி தேர்வு!
மலேசியாவின் ஒன்பதாவது பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகூப் (61) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு மலேசிய மன்னர் அப்துல்லா இந்த அறிவிப்பை வெள்ளிக்கிழமை மாலை வெளியிட்டுள்ளார்.
மலேசியாவின் பிரதமராக இருந்த மகாதீர் முகமது கூட்டணிக் கட்சிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக திடீரென பதவி விலகினார்.
இதையடுத்து, உள்துறை அமைச்சராக இருந்த மொகைதின் யாசின் (Muhyiddin Yassin) தமது ஆதரவாளர்கள், எதிர்க்கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கி பிரதமரானார். கூட்டணியில் ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாக சில தினங்களுக்கு முன்பு அவரும் பதவி விலகினார்.
இந்நிலையில், துணைப் பிரதமராக இருந்த இஸ்மாயில் சப்ரி யாகூப்பை (Ismail Sabri Yaakob) பிரதமர் வேட்பாளராக ஏற்க கூட்டணி கட்சிகள் முன்வந்தன. இஸ்மாயில் யாசினுக்கு நெருக்கடி கொடுத்த அம்னோ, கட்சியின் உதவித் தலைவராகவும் உள்ளார்.
இதையடுத்து, பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு, மலேசியாவின் 9-வது பிரதமராக மன்னர் அப்துல்லா சப்ரி யாகூப்பை தேர்வு செய்தார்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் அவரது பதவியேற்பு நிகழ்வு நடைபெறுகிறது. இதையடுத்து அண்மைய சில தினங்களாக நிலவி வந்த அரசியல் குழப்பங்களும் மோதல்களும் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.