காஸாவில் பலி எண்ணிக்கை 1,354 ஆக உயர்வு! 150 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துள்ள ஹமாஸ்?
ஹமாஸ் போராளிக்குழு பெண்கள், குழந்தைகள் உட்பட 150 பேரை பிடித்து வைத்துள்ளதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.
பலி எண்ணிக்கை
இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிக்குழு தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இருதரப்பிற்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது.
குறிப்பாக இஸ்ரேல் அரசு காசா மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் பலியானோர் எண்ணிக்கை 1,354 ஆக உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
AFP
அதேபோல் இஸ்ரேல் தரப்பில் 1,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆனால் ஹமாஸ் அமைப்பிற்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம் என அந்நாட்டு பிரதமர் கூறியிருந்தார்.
இஸ்ரேல் குற்றச்சாட்டு
இந்த நிலையில் ஹமாஸ் 150 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.
அவர்களில் ராணுவத்தினர், முதியவர்கள், குழந்தைகள் அடங்குவர் என கூறப்பட்டுள்ள நிலையில், அவர்களை விடுவிக்காவிட்டால் காசாவுக்கு மின்சாரம், தண்ணீர், எரிபொருள் உள்ளிட்டவற்றை வழங்க மாட்டோம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |