காஸா போருக்கு முன்னர் அந்தக் கொடூரத்தை நடத்தினோம்... உண்மையை ஒப்புக்கொண்ட இஸ்ரேல் அமைச்சர்
இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் படைகள் நடத்திய தாக்குதலின் போது மிக மோசமான Hannibal Directive என்ற நடவடிக்கையை முன்னெடுத்ததாக முன்னாள் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் இறுதியில் ஒப்புக்கொண்டுள்ளார்.
சொந்த மக்களையே
இஸ்ரேலின் Channel 12 என்ற செய்தி ஊடகத்தில் அவர் அளித்த நேர்காணலின் போது கேலன்ட் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். குறிப்பிட்ட பகுதிகளில் அந்த நடவடிக்கையை முன்னெடுக்க தாம் உத்தரவிட்டதாகவும்,
சில பகுதிகளுக்கு மறுப்பு தெரிவித்ததாகவும், ஆனால் அதுவே பெரும் சிக்கலை ஏற்படுத்தியதாகவும் கேலன்ட் தெரிவித்துள்ளார். Hannibal Directive என்பது சர்ச்சைக்குரிய கொடூர நடவடிக்கையாகும்.
இந்த இராணுவ நடவடிக்கை என்பது, எதிரிகளின் கைகளில் சிக்காமல் இருக்க சொந்த மக்களையே பலி வாங்குவதாகும். தொடர்புடைய நடவடிக்கை சர்ச்சைக்குரியது என்பதுடன், உரிய அனுமதி பெறாமல் பல்வேறு மோதல்களில் உத்தியோகப்பூர்வமற்ற முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
2023 அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 1100 இஸ்ரேலிய பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் மீது அப்போது இஸ்ரேல் குற்றஞ்சாட்டியது.
ஆனால் தற்போது முன்னாள் அமைச்சர் கேலன்ட் வெளிப்படுத்தியுள்ள தகவலின் அடிப்படையில், காஸா போருக்கு காரணம் தேடும் வகையில் சொந்த மக்களையே இஸ்ரேல் கொன்றுள்ளது அம்பலமாகியுள்ளது.
அக்டோபர் 7ம் திகதி தாக்குதலின் போது, இஸ்ரேலிய இராணுவம் ஹமாஸ் படைகளை குறிவைத்து ஹெலிகொப்டர்கள், ட்ரோன்கள் மற்றும் டாங்கிகளை களமிறக்கியது. மேலும், ஹமாஸ் படைகளிடம் சிக்கிய இஸ்ரேலிய மக்கள் மீதும் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஏற்கனவே ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையிலும் நோவா இசை விழாவில் கலந்துகொண்ட மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் ஹெலிகொப்டர் தாக்குதல் நடத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
போர் நிறுத்த நடவடிக்கை
இதனிடையே, இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்திய சில நாட்களுக்குப் பிறகு, அக்டோபர் 11 ம் திகதி லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா படைகள் மீது ஒரு பெரிய தாக்குதலுக்கு தான் அழுத்தம் கொடுத்ததாகவும் கேலன்ட் வெளிப்படுத்தியுள்ளார்.
மட்டுமின்றி, இஸ்ரேலியப் படைகளுக்கு ஹிஸ்புல்லா கூட்டம் குறித்து உளவுத்துறை தகவல்கள் கிடைத்ததாகவும், அங்கு அவர்கள் ஹசன் நஸ்ரல்லா மற்றும் ஈரானிய அதிகாரிகள் உள்ளிட்ட உயர் தலைவர்களை குறிவைத்ததாகவும் வெளிப்படுத்தியுள்ளார்.
ஹமாஸ் படைகளுடனான போர் நிறுத்த நடவடிக்கைகளை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது அமைச்சரவையே காலதாமதம் செய்து வந்ததாக கேலன்ட் அம்பலப்படுத்தியுள்ளார்.
பணயக்கைதிகளை மீட்கும் எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்க நெதன்யாகு அரசாங்கம் தயங்கியதாகவும், பெரும்பாலான பணயக்கைதிகளை இஸ்ரேல் இராணுவமே கொன்றுள்ளதாகவும் கேலன்ட் வெளிப்படுத்தியுள்ளார்.
நீண்ட 16 மாதங்களாக இஸ்ரேல் முன்னெடுக்கும் போரில் இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 48,000 என்றே கூறப்படுகிறது. ஆனால் 2 லட்சம் கடந்திருக்கலாம் என்றே சில மதிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |