உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறிய இஸ்ரேல்: அகதிகள் முகாம் மீது மீண்டும் வான் தாக்குதல்
காசாவில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய போர் விமான தாக்குதலில் 38 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
பலி எண்ணிக்கை அதிகரிப்பு
இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் இந்த போர நடவடிக்கையால் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இதுவரை நடந்துள்ள போர் தாக்குதலில் தோராயமாக 1400 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
Al Jazeera
அதே சமயம் குழந்தைகள், பெண்கள் என 9,800 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
அகதிகள் முகாம் மீது தாக்குதல்
இந்நிலையில் காசாவின் மஹஜி அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய விமானப்படை நடத்திய வான் தாக்குதலில் 38 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
அத்துடன் குடியிருப்பு கட்டிடங்களுக்கு இடையில் இந்த முகாம் அமைந்து இருந்ததால், இஸ்ரேலிய விமானப்படை நடத்திய இந்த தாக்குதலில் பல்வேறு குடியிருப்புகள் தரைமட்டம் ஆகியுள்ளன.
இஸ்ரேலின் இந்த தாக்குதலை ஹமாஸ் படையினர் படுகொலை என தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் மீதான தாக்குதலை நிறுத்தம் படி பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்தும் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |