24 மணிநேரத்தில் வடக்கு காசாவில் 6 மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல்! 22 பேர் பலியானதாக தகவல்
காசாவின் வடக்கு பகுதியில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 22 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
காசாவில் 10,812 பேர் பலி
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் இதுவரை 12,300 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், காசாவில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,812 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேலிய போர் விமானங்கள் காசாவின் வடக்கு பகுதியில் உள்ள 6 மருத்துவமனைகள் மற்றும் ஒரு பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் மற்றொரு மருத்துவமனையில் தரைவழிப் போர் நடந்து கொண்டிருப்பதாகவும் பாலஸ்தீனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Evelyn Hockstein/Reuters
குழந்தைகள் புற்றுநோய் மருத்துவமனைக்கு தீ
மேலும், காசாவின் பாரிய மருத்துவமனையான அல்-ஷிஃபாவின் முற்றத்தில் அதிகாலையில் ஏவுகணை தாக்கியதாகவும், இந்தோனேசிய மருத்துவமனை ஒன்று சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதேபோல் நாசர் ராண்டிசி குழந்தைகள் புற்றுநோய் மருத்துவமனைக்கு தீ வைத்ததாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |