இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு பயணத் தடை விதித்த பிரபல நாடு!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இஸ்ரேல் அரசு அந்நாட்டு மக்களுக்கு தடை விதித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பிரித்தானியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட பல நாடுகளில், இந்தியாவில் இருந்து வருவோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்காசிய நாடான இஸ்ரேலிலும் அதுபோன்ற ஒரு தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் அரசு கொரோனா அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு, இந்தியாவுக்கு மக்கள் பயணம் மேற்கொள்ள தடை விதித்துள்ளது.
இந்தியா மட்டுமின்றி, உக்ரைன், பிரேசில், எத்தியோபியா, தென் ஆப்ரிக்கா, மெக்சிகோ, துருக்கி உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லவும் இஸ்ரேல் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று (மே 3) முதல் அமுலுக்கு வந்த இந்த தடை, வரும் 16-ஆம் திகதி தேதி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்த 7 நாடுகளில் இருந்து இஸ்ரேலுக்கு வரும் மக்கள், 2 வார காலத்திற்கு தனிமையில் இருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.