இந்த இரு நாடுகளையும் விட்டு உடனடியாக வெளியேறுக... குடிமக்களுக்கு இஸ்ரேல் அவசர எச்சரிக்கை
இஸ்ரேல் - ஹமாஸ் போர் வலுக்கும் நிலையில் எகிப்து மற்றும் ஜோர்டானை விட்டு உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் தனது குடிமக்களை வலியுறுத்தியதாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.
எகிப்து மற்றும் ஜோர்டானில்
ஹமாஸ் படைகளை ஒடுக்க இஸ்ரேல் போர் பிரகடனம் செய்துள்ளதை அடுத்து, இதன் தாக்கம் எகிப்து மற்றும் ஜோர்டானில் எதிரொலிக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையிலேயே இஸ்ரேல் இந்த முடிவுக்கு வந்துள்ளது.
Credit: Alamy
சனிக்கிழமை இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், சீனாய் உட்பட எகிப்து மற்றும் ஜோர்டானில் தற்போது பயணம் மேற்கொள்வது உயிர் ஆபத்தை ஏற்படுத்தலாம் எனவும், இந்த நாடுகளில் தங்கியுள்ள இஸ்ரேலிய மக்கள் மிக விரைவில் அங்கிருந்து வெளியேறவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
முன்னதாக துருக்கி நாட்டிற்கான தூதர்களை திரும்ப பெற்றுக்கொண்ட இஸ்ரேல் பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டியது. மட்டுமின்றி துருக்கியில் உள்ள இஸ்ரேலிய மக்களும் உடனடியாக அந்த நாட்டைவிட்டு வெளியேறவும் வலியுறுத்தியது.

மத்திய கிழக்கு நாடுகள் வழி இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் கூடாது: அமெரிக்காவுக்கு நெருக்கடி அளிக்கும் முக்கிய நாடு
மட்டுமின்றி காஸா மீது இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் கொந்தளிப்பும் எதிர்ப்பும் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தமது குடிமக்களை இந்த இரு நாடுகளில் இருந்தும் வெளியேற இஸ்ரேல் கோரியுள்ளது.
பெரும்பாலும் அப்பாவி மக்கள்
அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் போராளிகள் காசா பகுதியில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழைந்து 200க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை பிடித்துள்ளதுடன் குறைந்தது 1,400 பேரைக் கொன்றதை அடுத்து போர் மூண்டது.
குறித்த தாக்குதல் சம்பவத்தில் பெரும்பாலும் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், பலர் உயிருடன் நெருப்பு வைத்து கொளுத்தப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால் தீக்கிரையான சடலங்களை இஸ்ரேல் தரப்பு மீட்டதாக தகவல் இல்லை.
@getty
இதன் பின்னர் ஹமாஸ் படைகளை மொத்தமாக அழிக்க சபதமெடுத்துள்ள இஸ்ரேல் போர் பிரகடனமும் செய்துள்ளது. அத்துடன் முன்னெடுக்கப்பட்ட வான் தாக்குதலில் காஸா நகரின் மொத்த கட்டிடங்களும் தரைமட்டமானது.
இதுவரை பாலஸ்தீனம் தரப்பில் 4,137 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலும் சிறார்கள், பெண்கள் உள்ளிட்ட அப்பாவி மக்கள் என்றே கூறப்படுகிறது.
@afp
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |