காசாவில் 5 வயது சிறுமி கொல்லப்பட்ட விவகாரம்: குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிட்ட இஸ்ரேல்
Israel criminal probe into killing 5 years old hind rajab: காசா நகரில் 5 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவியல் விசாரணைக்கு இஸ்ரேலிய ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிட்ட இஸ்ரேலிய ராணுவம்
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காசாவில் கொல்லப்பட்ட 5 வயது சிறுமி ஹிந்த் ரஜப் மற்றும் 8 பேரின் மரணம் குறித்து இஸ்ரேலிய ராணுவம் முறையான குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்க ஆம்புலன்ஸ் இயக்கத்தை ஒருங்கிணைப்பதில் ஏற்பட்ட தோல்விகளே இந்த விசாரணை தொடங்குவதற்கான முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
5 வயது சிறுமி ஹிந்த் ரஜப் கொல்லப்பட்டது தொடர்பான இந்த விசாரணை ராணுவக் காவல்துறையின் குற்றவியல் விசாரணைப் பிரிவால் நடத்தப்பட்டுள்ளது.
💔For over three hours, Hind has desperately pleaded with our teams for rescue from the occupation tanks surrounding her, enduring gunfire and the horror of being alone, trapped among the bodies of her relatives shot by the Israeli forces in front of her eyes. The PRCS heroes… pic.twitter.com/VT00WJaP1B
— PRCS (@PalestineRCS) February 3, 2024
2024ம் ஆண்டு நடந்த சம்பவம்
கடுமையான மோதல்களுக்கு மத்தியில் காசா நகரின் டெல் அல்-ஹவா(Tel al Hawa) பகுதியில் இருந்து 5 வயது சிறுமி ஹிந்த் மற்றும் ஹமதா குடும்பத்தினர் 6 பேர் தப்பியோட முயன்றனர்.
அப்போது அவர்கள் பயணித்த வாகனம் மீது இஸ்ரேலிய ராணுவம் நேரடி தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்ட ஆடியோவில் சிறுமி ஹிந்த்தின் கடைசி நேர பரிதவிப்புகள் இடம்பெற்றுள்ளது.

ஹிந்தை காப்பாற்ற யூசப் சீனோ மற்றும் அகமது மத்ஹுன் ஆகிய 2 அவசர ஊர்திப் பணியாளர்கள் அனுப்பப்பட்டனர். அவர்கள் சம்பவ இடத்தை நெருங்கிய போது பலத்த துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. பின்னர் அவர்களுடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட 12 நாட்களுக்கு பிறகு ஹிந்த் மற்றும் அவரது 6 உறவினர்கள் மற்றும் 2 மருத்துவ பணியாளர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |