ஈரானின் ஏவுகணை வீச்சில் குலைநடுங்கிப் போன இஸ்ரேல்: வெளிவரும் அதிரவைக்கும் தகவல்
ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை முறியடிக்கும் பாதுகாப்பு அமைப்புகள் இஸ்ரேலிடம் மிக ஆபத்தான நிலையில் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏவுகணைகளின் பற்றாக்குறை
அமெரிக்கா தரப்பில் இருந்தே இஸ்ரேலின் மிக மோசமான நிலை குறித்த தகவல் கசிந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 12 நாட்கள் நீடித்த போரின் போதே, ஈரானிடம் பலத்த அடிவாங்கிய இஸ்ரேல், அதில் இருந்து மீளவில்லை என்றே அமெரிக்க தரப்பு அதிகாரிகள் தற்போது குறிப்பிடுகின்றனர்.

இஸ்ரேலிடம் ஈரானை முழு பலத்துடன் தாக்கும் ஏவுகணைகளின் பற்றாக்குறை இருக்கும் நிலையில், ஈரான் கொத்துக் குண்டுகளால் இஸ்ரேலை குலைநடுகங்க வைத்து வருகிறது.
இது இஸ்ரேலால் தடுக்க முடியாமல் போனதுடன், பதிலடி தரவும் முடியாத இக்கட்டான நிலையில் சிக்கியுள்ளதாக கூறுகின்றனர். இஸ்ரேலின் இந்த இக்கட்டான நிலை குறித்து அமெரிக்கா முன்பே அறிந்திருந்ததாகவும் அதிகாரிகள் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இருப்பு வைத்துள்ள ஆயுதங்களுக்கு மிக சமீபத்தில் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை, ஆனால் ஈரான் நீண்ட காலத்திற்கு இந்த போரை இழுத்துச் செல்லும் என்றால், அமெரிக்காவால் சமாளிக்க முடியும், ஆனால் இஸ்ரேலின் நிலைமை கேள்விக்குறி என்றே அதிகாரிகளில் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமது ஆயுத இருப்புகளில் சிலவற்றை இஸ்ரேலுக்கு அமெரிக்கா பகிர்ந்துகொள்ளவோ விற்கவோ வாய்ப்புள்ளதா என்பது தொடர்பிலும் தகவல் இல்லை.

வான் பாதுகாப்பு அமைப்புகள் இல்லாமல், போர் விமானங்களால் ஈரானுக்கு பதிலடி தரலாம். ஆனால், ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன்களால் பந்தாடி வருகிறது.
பேட்ரியட் ஏவுகணை
இஸ்ரேலால் பெரிதும் கொண்டாடப்படும் Iron Dome அமைப்பானது குறுந்தொலைவு ஏவுகணைகளை மட்டுமே எதிர்கொள்ளும். இதுவரை அமெரிக்காவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் என்பது முடிவற்றது என பெருமை பேசி வந்த ட்ரம்பின் கூற்றை நிபுணர்கள் பலர் கேள்க்குறியாக்கியுள்ளனர்.
அமெரிக்க இராணுவம் எதிர்பார்த்த எண்ணிக்கையில் அவை இல்லை என்றே நிபுணர்களின் கருத்து. கடந்த ஜூன் மாதம் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா 150 தாட் ஏவுகணைகளைப் பயன்படுத்தியுள்ளது.

அப்போதிருந்த எண்ணிக்கையில் அது கால் பகுதி என்றே கூறப்பட்டது. மேலும், ஈரான் மீதான தற்போதைய போரில் முதல் 5 நாட்களில் மட்டும் 2.4 பில்லியன் டொலர் மதிப்பிலான பேட்ரியட் ஏவுகணைகளை அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது.
இதனிடையே, போர் மிக விரைவில் முடிவுக்கு வரும் என கூறியுள்ள ட்ரம்ப், ஆனால் அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்கள் இலக்குகளை அடைவதற்காக, தேவைப்படும் காலம் வரை போரிடத் தயாராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |