பொழியும் ராக்கெட் மழை... தீவிரமடையும் இராணுவம்-போராளிகளுக்கு இடையேயான மோதல்! இஸ்ரேலின் முக்கிய நகரில் அவசரநிலை பிரகடனம்
இஸ்ரேலிய இராணுவ படைகளுக்கும் பாலஸ்தீன போராளிகளுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்த வரும் நிலையில் இஸ்ரேலின் லாட் நகரில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
முஸ்லிம் மற்றும் யூதர்கள் இருவருக்கும் புனித ஸ்தலமான ஜெருசலேத்தில் கடந்த வாரம் இஸ்ரேலி பொலிசாருக்கும் பாலஸ்தீன போராட்டகாரர்களுக்கும் இடையே வன்முறை மோதல் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் அதிகரித்தது.
பாலஸ்தீன போராளிகள் இஸ்ரேலை நோக்கி 100-க்கும் ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தினர். மறுபுறும் இஸ்ரேல் காசாவில் பயங்கர வான்வெளி தாக்குதல் நடத்தியது.
சுகாதார அதிகாரிகள் அளித்த தகவலின் படி, தற்போது வரை இரு நாடுகளுக்கு இடையேயான மோதலில் 10 குழந்தைகள் உட்பட 35 பாலஸ்தீனர்கள் மற்றும் 5 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனிடையே இஸ்ரேலின் மத்திய நகரான லாட்-ல் இஸ்ரேலிய அரேபியர்கள் கார்களை எரித்து கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
லாட் நகரில் நடந்த கலவரத்தில் 12 பேர் காயமடைந்ததாக நகர மேயர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, லாட் நகரில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான பதட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என சர்வதேச சமூகம் இரு நாடுகளையும் வலியுறுத்தியுள்ளது.