எச்சரித்த சில நிமிடங்களில் சர்வதேச ஊடகங்கள் இயங்கும் பிரபல அடுக்குமாடி கட்டிடத்தை குண்டு போட்டு தகர்த்த இஸ்ரேல்! பரபரப்பு காட்சி
காசாவில் உள்ள சர்வதேச ஊடகங்கள் இயங்கும் பிரபல அடுக்குமாடி கட்டிடத்தை இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தி தகர்த்தது.
காசாவில் உள்ள Al-Jalaa கட்டிடமே இவ்வாறு தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.
Al-Jazeera, the Associated Press போன்ற சர்தேச ஊடக நிறுவனங்களின் அலுவலகங்கள் உட்பட பல முக்கிய நிறுவனங்கள் Al-Jalaa கட்டிடத்தில் செயல்பட்டு வந்தன.
சற்று நேரத்திற்கு முன் Al-Jalaa கட்டிடத்தை இன்னும் ஒரு மணிநேரத்திற்குள் இஸ்ரேல் குண்டு போட்டு அழிக்கவுள்ளதாகவும், உடனே அதில் இருப்பவர்கள் வெளியேறும் படி கட்டிடத்தின் உரிமையாளர் Jawwad Mahdi எச்சரிக்கை விடுத்திருந்தார்.
எச்சரிக்கை விடுக்கப்பட்டு சில நிமிடங்களில் இஸ்ரேல் Al-Jalaa கட்டிடத்தை குண்டு போட்டு தகர்த்துள்ளது.
குறித்த கட்டிடத்தில் ஹமாஸ் போராளிகள் செயல்பட்டு வருவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
JUST IN - Al-Jalaa tower in Gaza , which houses several media outlets, has been Destr0yed after several Roof-knock drone Strikes pic.twitter.com/uO1dqITZ9F
— Megh Updates 🚨 (@MeghUpdates) May 15, 2021
குறித்த தாக்குதலில் ஊடகவியலாளர்கள் பலர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.