செத்து மடியும் மக்கள்... குண்டு மழை பொழிந்த இஸ்ரேல்! நாம் அனைவரும் முஸ்லீம் தானே என கண்ணீர் விடும் குழந்தையின் காட்சி
இஸ்ரேல் நடத்தி வரும் ராக்கேட் தாக்குதலில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் 10 வயது சிறுமி ஒருவர் கண்ணீர் மல்க பேசும் வீடியோ பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பயங்கர மோதல் நடைபெற்று வருகிறது.
காஜா முனை மற்றும் மேற்கு கரை என்று மொத்தம் இரண்டு பகுதிகளாக பாலஸ்தீனம் உள்ளது. காஜா முனையை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. மேற்குகரை பகுதியின் பாலஸ்தீன அதிபராக முகமது அப்பாஸ் செயல்பட்டு வருகிறார். மேற்குகரையின் சில பகுதிகளை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
காஜாமுனை பகுதியில் இருந்து இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் அமைப்பினர் அவ்வப்போது ராக்கெட் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்துவது வழக்கம். ஹமாஸ் தாக்குதலுக்கு இஸ்ரேல் இராணுவமும் தக்கபதிலடி கொடுத்து வருகிறது.
சமீபத்தில், ஜெருசலேமில் உள்ள Sheikh Jarrah பகுதியிலிருந்து அரபு குடும்பங்களை வெளியேற்றுவது தொடர்பாக பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேலிய பொலிசாருக்கும் இடையிலான ஏற்பட்ட மோதல் காரணமாக, இஸ்ரேல், பாலிஸ்தீனத்தின் மீது ராக்கெட் குண்டுகளை வீசி வருகிறது.
அதுமட்டுமின்றி, ஜெருசலேமில் உள்ள பாலத்தீன மக்கள் தொழுகை நடத்தும் அல் அக்சா மசுதிக்குள் புகுந்து இஸ்ரேல் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இஸ்ரேலுக்குள் காஜாவில் உள்ள ஹமாஸ் போர்ப்படை தாக்குதல் நடத்தியது.
சிறிய ரக ராக்கெட்டுகளை வீசி ஹமாஸ் இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் காஜாவில் வான்வெளி தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.
இதனால் இதுவரை பாலிஸ்தீனத்தில் இருக்கும் காஜாவில் 132 பேர் உயிரிழந்துள்ளனர். 950 பேர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 32 குழந்தைகள் மற்றும் 21 குழந்தைகள் அடங்குவர்.
இந்நிலையில், நள்ளிரவு நேரத்தில் கூட எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி இஸ்ரேல் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக, காஜாவில் இருக்கும் குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
BREAKING: Israeli occupation warplanes completely destroyed a multi-story building known to host various media and journalism offices as well as residential apartments in the middle of Gaza City. #GazaUnderAttack #SavePalestine pic.twitter.com/G3bGIPyESN
— Palestine Responds (@PalRes1948) May 11, 2021
இதனால் அந்த கட்டிடம் அப்படியே சரிந்து விழுந்து கிடக்கிறது. இங்கு ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
மேலும், கடந்த சில நாட்களாகவே இஸ்ரேல், ஏவுகணை மூலம் காஜா பகுதியை குறிப்பிட்டு தாக்கி வருகிறது. அங்கிருக்கும் பெரிய, பெரிய கட்டிடங்கள் எல்லாம், நொடிப் பொழுதில் நொறுங்கி கீழே விழுவதை பார்க்க முடிகிறது.
They attack this building while people inside , israel didn’t warn them before the attack people screaming under the rubble 💔💔😢😢 #GazaUnderAttack #Gaza_Under_Attack pic.twitter.com/zMVdU2XijO
— Palestine qadi (@ALQadiPAL) May 15, 2021
மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கும், இங்கு ஓடி வருகின்றன. இஸ்ரேல் இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நாடுகள் கூறி வருகின்றன.
இதற்கிடையில், தன்னுடைய சொந்தங்களை இந்த ஏவுகணை தாக்குதலில் பலி கொடுத்த 10 வயது சிறுமி, அங்கிருக்கும் ஊடகம் ஒன்றிற்கு கண்ணீர் மல்க பேட்டி கொடுத்தார். அப்போது அவர் இங்கு என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை.
"I don't know what to do."
— Middle East Eye (@MiddleEastEye) May 15, 2021
A 10-year-old Palestinian girl breaks down while talking to MEE after Israeli air strikes destroyed her neighbour's house, killing 8 children and 2 women#Gaza #Palestine #Israel pic.twitter.com/x86yAcRRSU
நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? நான் ஒரு சிறந்த மருத்துவராகவோ அல்லது வேறு ஏதாவாகவோ இருந்திருந்தால், இது போன்ற சூழ்நிலையில் என் மக்களுக்கு உதவ ஓடியிப்பேன். ஆனால், எனக்கு வெறும் 10 வயது தான் ஆகிறது.
என்ன செய்வது என்றே தெரியவில்லை. எனக்கு பயமாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அழுது கொண்டிருக்கிறோம். நாம் அனைவரும் இஸ்லாமியர்கள், அப்புறம் ஏன் இப்படி செய்கிறீர்கள், இதை என் குடும்பம், மற்றும் உறவினர்கள் முற்றிலும் வெறுக்கிறார்கள். இங்கு ஏராளமான குழந்தைகள் இருக்கிறார்கள்.
ஆனால் நீங்களோ அங்கிருந்து ஏவுகணைகளை இப்படி அனுப்புகிறீர்கள், ஏன் இந்த கொலை வெறி? இது நல்லது கிடையாது என்று கண்கலங்கி பேசாமல் சென்றுவிட்டார்.