ஐரோப்பா முழுவதும் ஈரானின் கொடூர முகத்தை அம்பலப்படுத்திய இஸ்ரேல்
பிரான்சில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு ஐரோப்பா முழுவதும் தாக்குதல் நடத்த ஈரானிய பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தாக்குதலுக்கு பின்னணியிலும் ஈரான்
மேலும், Foxtrot உள்ளிட்ட குழுக்களுக்கு ஈரான் தமது ஆதரவை அதிகரித்துள்ளதாகவும் இஸ்ரேலின் உளவு அமைப்பு அசாதாரண அறிக்கை ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளது.
இந்த Foxtrot குழுவானது கொலைகள் மற்றும் போதை மருந்து கடத்தல் போன்ற சட்டவிரோத சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறது. ஐரோப்பாவில் அக்டோபர் 7ம் திகதிக்கு பின்னர் இஸ்ரேலிய தூதரகங்கள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு பின்னணியிலும் ஈரான் இருப்பதாகவே இஸ்ரேலிய உளவுத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
தற்போது Foxtrot மற்றும் Rumba ஆகிய இரு குழுக்களுக்கு ஈரான் நிதியுதவி அளித்து வருகிறது. இந்த இரு குழுக்களும் ஸ்வீடன் மற்றும் ஐரோப்பா முழுவதும் வன்முறை சம்பவங்கள் மற்றும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் செயலில் நேரடியாக ஈடுபட்டு வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை பெல்ஜியத்தில் அமைந்துள்ள இஸ்ரேல் தூதரகம் மீதான தாக்குதலுக்கு பின்னணியிலும் ஈரான் என்றே இஸ்ரேலிய உளவு அமைப்பு குறிப்பிட்டுள்ளது. மே 17ம் திகதி ஸ்வீடனில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் பின்னணியிலும் ஈரான் என தெரிவித்துள்ளது.
ஸ்வீடனில் இஸ்ரேல் தூதரகத்தின் மீதான துப்பாக்கி தாக்குதலுக்கு பின்னணியில் Ismail Abdo தலைமையிலான Rumba குழு இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. Rawa Majid தலைமையில் செயல்படும் Foxtrot குழுவானது ஸ்வீடனில் இயங்கிவரும் மிகப்பெரிய குற்றவியல் அமைப்பாகும்.
ஐரோப்பா முழுவதும் இந்த அமைப்பு
ஆனால் ஐரோப்பா முழுவதும் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. செப்டம்பர் மாதம் துருக்கியில் இருந்து தப்பிய Rawa Majid ஈரானுக்கு சென்றதாகவும், அங்குள்ள அதிகாரிகளால் அவர் பாதுகாக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் அம்பலப்படுத்தியுள்ளது.
உண்மையில் ஈரான் கைது செய்ததாக நாடகம் ஒன்றை நடத்தி, ஐரோப்பா முழுவதும் யூதர்கள் மற்றும் இஸ்ரேலிய தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்த Rawa Majid மற்றும் அவரது குழுக்களை பயன்படுத்துவதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது.
தற்போது பல மாதங்களாக ஈரானுக்கு ஆதரவாக Rawa Majid செயல்பட்டு வருகிறார் என்றும் இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. இதனிடையே, பல ஆண்டுகளாக ஸ்வீடனில் தாக்குதல் நடவடிக்கைகளை ஈரான் முன்னெடுப்பதாக அந்த நாட்டின் பாதுகாப்பு சேவை அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |