23 நாட்கள் ஹமாஸிடம் பிணைக்கைதியாக இருந்த பெண்ணை மீட்ட இஸ்ரேல் ராணுவம்: மகிழ்ச்சியில் திளைக்கும் குடும்பத்தினர்
ஹமாஸ் ஆயுதக்குழுவிடம் பிணைக்கைதியாக இருந்த இஸ்ரேல் பாதுகாப்புப்படை வீராங்கனை ஒருவரை இஸ்ரேல் ராணுவம் மீட்டுள்ளது.
23 நாட்கள் ஹமாஸிடம் பிணைக்கைதியாக இருந்த பெண்
இஸ்ரேல் ராணுவ வீராங்கனையான Ori Megidish என்ற பெண், 23 நாட்கள் ஹமாஸிடம் பிணைக்கைதியாக இருந்தார். நேற்று அவரை இஸ்ரேல் ராணுவம் மீட்டுள்ளது.
அவர் மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், நல்ல உடல் நிலையில் இருப்பதாகவும்,தனது குடும்பத்தினருடன் இணைந்துகொண்டுள்ளதாகவும் பாதுகாப்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
Credit: IDF
மகிழ்ச்சியில் திளைக்கும் குடும்பத்தினர்
தங்கள் பிள்ளை ஹமாஸிடமிருந்து விடுவிக்கப்பட்டு பத்திரமாக வீடு திரும்பியதால் Oriயின் குடும்பத்தினர் பெருமகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்.
Credit: IDF
தங்கள் பிள்ளை உயிருடன் பத்திரமாக வீடு திரும்பியதற்காக தாங்கள் கடவுளுக்கும், இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக கண்ணீர் மல்கத் தெரிவித்துக்கொண்டார் Oriயின் உறவினர் ஒருவர்.
இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் தங்கள் தரைவழி ஆபரேஷனைத் துவங்கியதைத் தொடர்ந்து, முதலில் மீட்கப்பட்ட பிணைக்கைதி Ori என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |