நால்வரை மீட்க 270 அப்பாவிகளைக் கொன்ற விவகாரம்: போர் குற்றமென ஐநா மனித உரிமைகள் அமைப்பு
நான்கு பணயக்கைதிகளை மீட்க காஸா பகுதியில் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்ட சம்பவம் போர் குற்றமென ஐநா மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பணயக்கைதிகள்
மட்டுமின்றி, மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதியில் பணயக்கைதிகளை ஹமாஸ் படைகள் சிறை வைத்ததும் போர் குற்றத்தின் ஒருபகுதியே என குறிப்பிட்டுள்ளனர்.
மத்திய காஸாவின் Nuseirat பகுதியில் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட வான் தாக்குதலை அடுத்து, நான்கு இஸ்ரேல் பணயக்கைதிகள் மீட்கப்பட்டனர். இப்பகுதியில் இருவேறு குடியிருப்புகளில் ஹமாஸ் படைகள் பணயக்கைதிகளை சிறை வைத்திருந்தனர்.
இங்கிருந்த நால்வரையும் மீட்கும் பொருட்டு இஸ்ரேல் முன்னெடுத்த தாக்குதலில் 270க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேலின் இந்த நடவடிக்கை போர் விதிகளை மீறும் செயல் என்று ஐநா மனித உரிமைகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதியில் பணயக்கைதிகளை சிறை வைப்பதும், பாலஸ்தீன மக்களின் உயிருக்கும் பணயக்கைதிகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதும் போர் குற்றந்தான் என குறிப்பிட்டுள்ளனர்.
இதுவரை 37,000 கடந்துள்ளது
அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் படைகள் திட்டமிட்டு முன்னெடுத்த தாக்குதலில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் இதற்கு பதிலடி தரும் வகையில் போர் பிரகடனம் செய்துகொண்ட இஸ்ரேல், வான்வழி தாக்குதலை முன்னெடுத்ததுடன், தரைவழி தாக்குதலையும் தொடுத்தது.
இதில் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை இதுவரை 37,000 கடந்துள்ளது. அக்டோபர் 7ம் திகதி சுமார் 250 இஸ்ரேலிய பணயக்கைதிகளுடன் ஹமாஸ் படைகள் காஸா திரும்பினர்.
இதில் 100க்கும் அதிகமானோர் விடுக்கப்பட்டுள்ளனர். பதிலுக்கு 240 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்துள்ளது. இஸ்ரேல் தரப்பு வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், 116 பணயக்கைதிகள் தற்போதும் ஹமாஸ் பிடியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |