இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதல்: பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்
இஸ்ரேல் மீதான ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் தாக்குதலில் 23 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
23 நாடுகளைச் சேர்ந்தவர்கள்
ஹமாஸ் தாக்குதலில், அமெரிக்கா, உக்ரைன், ரஷ்யா, பிரான்ஸ், பிரித்தானியா, அயர்லாந்து, ஜேர்மனி, ஆஸ்திரியா, தாய்லாந்து, தான்சானியா, நேபாளம், பெரு, பிலிப்பைன்ஸ். அர்ஜெண்டினா, பராகுவே, கொலம்பியா, மெக்சிகோ, சீனா, கனடா, பிரேசில், இத்தாலி, கம்போடியா, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
ft
இவர்களில் கொல்லப்பட்டவர்களும், காணாமல் போனவர்களும் அடங்குவர். காணாமல் போனவர்கள், உண்மையில் ஹமாஸ் ஆயுதக்குழுவால் கடத்தப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இலங்கையர்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்
இந்நிலையில், இஸ்ரேல் நாட்டுக்கான இலங்கை தூதரான நிமல் பண்டார (Nimal Bandara), இரண்டு இலங்கையர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Anula Ratnayake (49) மற்றும் Bandara Yatawara (48) என்பவர்களே காணாமல் போயுள்ளதாக நிமல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சுஜித் பிரியங்கரா என்ற இலங்கையர், படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும், மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட போதிலும் தூதரகம் அவரை தொடர்ந்து கவனித்து வருவதாகவும் நிமல் பண்டார கூறியதாக இலங்கை ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |