ஒத்தி வைக்கப்படும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம்: பின்னணி காரணம் என்ன?
இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான 4 நாள் போர் நிறுத்தம் மேலும் ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தம்
இஸ்ரேலிய ராணுவ படைகளுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த அக்டோபர் 7ம் திகதி முதல் போர் தாக்குதலானது நடைபெற்று வருகிறது.
உலக நாடுகளின் வற்புறுத்தலை தொடர்ந்து காசாவில் 4 நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதற்கு மாற்றாக ஹமாஸ் படையினர் 50 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.
அதே வேளையில், சிறையில் இருக்கும் 150க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை விடுவிக்கவும் உடன்பாடு மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
தள்ளிப் போகும் போர் நிறுத்தம்
இந்நிலையில் இஸ்ரேலுக்கும்-ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்தம் 24 மணி நேரத்திற்குள் அறிவிக்கப்படும் என கத்தார் வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்து இருந்தது.
ஆனால் இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான 4 நாள் போர் நிறுத்தம் மேலும் ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக இஸ்ரேலிய அரசின் ஆதாரங்களை மேற்கோள் காட்டி, CNN செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் நவம்பர் 24ம் திகதி வரை போர் நிறுத்தம் நடைமுறைக்கு வருவதற்கான வாய்ப்புகள் சிறிதும் இல்லை என தெரியவந்துள்ளது.
இதற்கு சிறைப்பிடிக்கப்பட்டவர்களின் பெயர்கள் பட்டியலில் முழுமையடையாத தகவல்கள் இருப்பது தான் முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |