இஸ்ரேல் ஈரான் மோதலாக உருவெடுத்துள்ள இஸ்ரேல் ஹமாஸ் போர்: சமீபத்திய தகவல்கள்
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் பல ஆண்டுகளாக மோதல்கள் தொடரும் நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் திகதி, திடீரென காசாவிலிருந்து இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதலில் சுமார் 1,400 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டவர்.
இஸ்ரேல் பதிலடி கொடுக்கத் துவங்க, 2024 ஏப்ரல் மாதம், 8ஆம் திகதி நிலவரப்படி 33,091பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதலைத் துவக்க, இஸ்ரேல் ஹமாஸ் மோதலாகத் துவங்கிய பிரச்சினை, திசைமாறி, இன்று ஈரான் இஸ்ரேல் மோதலாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் ஈரான் மோதல் தொடர்பிலான சமீபத்திய நிகழ்வுகள் சிலவற்றை சுருக்கமாக பார்க்கலாம்.
1. இஸ்ரேல் ராணுவம், தெற்கு லெபனானிலுள்ள 40 ஹிஸ்புல்லா தீவிரவாத இலக்குகளை, நேற்று, அதாவது, புதன்கிழமையன்று, தாக்கியதாக தெரிவித்துள்ளது.
2. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரசின் செய்தித் தொடர்பாளர், ரஃபாவில் தரைவழி ஆபரேஷன் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். என்றாலும், அது எப்போது என அவர் தெரிவிக்கவில்லை.
3. தாக்குதலுக்கு முன் ரஃபாவிலிருந்து வெளியேற்றப்படும் பாலஸ்தீனியர்களை தங்கவைப்பதற்காக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் 40,000 கூடாரங்களை வாங்கியுள்ளது.
4. இஸ்ரேல் மீது அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்புக்கு எதிராக தனது போரைத் தொடங்கிய இஸ்ரேல், நான்கு ஹமாஸ் போர் பட்டாலியன்கள் ரஃபாவில் இருப்பதாகக் கூறுகிறது.
5. ஆனால், எகிப்து ஜனாதிபதியான Abdel-Fattah Al-Sisi, ரஃபாவில் நடத்தப்படும் எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்துள்ளார்.
6. இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா, ரஃபா மீதான தாக்குதலுக்கு பதிலாக, அங்குள்ள ஹமாஸ் போராளிகளை வேறு வழிகளில் எதிர்த்துப் போராடலாம் என்று கூறியுள்ளது.
7. இஸ்ரேல், தெற்கு காசாவில் இருந்து பெரும்பாலான தரைப்படைகளை திரும்பப் பெற்றுவிட்டது என்றாலும் வான்வழித்தாக்குதல்களும் ரெய்டுகளும் நீடிக்கின்றன