வெளிநாட்டில் 8,000 ஆண்டுகள் பயணத்தடை விதிக்கப்பட்ட அவுஸ்திரேலியர்: வெளியான காரணம்
இஸ்ரேலில் வசித்துவரும் அவுஸ்திரேலிய நாட்டவர் ஒருவருக்கு 8,000 ஆண்டுகள் பயணத்தடை விதித்துள்ளது அந்த நாட்டு நீதிமன்றம்.
அவுஸ்திரேலியரான 44 வயது Noam Huppert என்பவர் தமது முன்னாள் மனைவிக்கு ஜீவனாம்சம் அளிக்க தவறிய நிலையில், குறித்த பெண்மணி குடும்ப நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
தமது பிள்ளைகள் இருவரும் 18 வயது நிரம்பும் வரையில் மாதம் தலா 1,200 பவுண்டுகள் அளிக்க வேண்டும் என்ற உத்தரவை 2013ல் நீதிமன்றம் மூலம் பெற்றுள்ளார் குறித்த பெண்மணி..
நோம் ஹப்பர்ட்டின் முன்னாள் மனைவி இஸ்ரேல் நாட்டவர். தமது பிள்ளைகள் இருவருக்கும் 3 மாதம் மற்றும் 5 வயது இருக்கும் போது, கடந்த 2011ல் இஸ்ரேல் திரும்பியுள்ளார். தொடர்ந்து 2012ல் குடும்பத்தினருடன் இணையும் நோக்கில் நோம் ஹப்பர்ட் இஸ்ரேலுக்கு சென்றுள்ளார்.
ஆனால் அதன் பிறகு இதுவரை நோம் ஹப்பர்ட்டால் அவுஸ்திரேலியாவுக்கு திரும்ப முடியவில்லை என்றே கூறப்படுகிறது. அவர் தமது குழந்தைகளுக்கான பாதுகாப்பு தொகையாக நீதிமன்றம் அறிவித்த மாதாந்திர தொகையை மொத்தமாக 1.8 மில்லியன் பவுண்டுகள் செலுத்தும் வரையில் இந்த பயணத்தடை நீடிக்கும் என்றே தெரிய வந்துள்ளது.
ஆனால், மொத்தமாக 1.8 மில்லியன் தொகையை செலுத்தினால், பயணத்தடை விலக்கப்படுமா என்பதில் தெளிவான தகவல் இல்லை என்றே கூறப்படுகிறது.
இஸ்ரேல் நீதித்துறையின் கடும்போக்கு நடவடிக்கைகளால் பல வெளிநாட்டவர்கள் வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக நோம் ஹப்பர்ட் செய்தி ஊடகம் ஒன்றிற்கு பதிலளித்துள்ளார்.
இஸ்ரேலிய குடும்பச் சட்டம் பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக பலமுறை விமர்சிக்கப்பட்டு வருகிறது.
மேலும், 2018 ஆம் ஆண்டில், விவாகரத்து பெற்ற ஆண்களில் 43 சதவீதம் பேர் தங்கள் பிள்ளைகளுக்கான பாதுகாப்புத் தொகையை வழங்க மறுத்ததாக நிதி அமைச்சகம் கண்டறிந்துள்ளது.