ஈரானை தொடர்ந்து இஸ்ரேல் மீது ஏமன் தாக்குதல்: ஏவுகணைகளை ஏவிய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்!
இஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஏமனில் இருந்து ஏவப்பட்ட டஜன் கணக்கான ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் வான்வெளியில் இடைமறித்து வெற்றிகரமாக அழித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல் காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக ஹவுதி பயங்கரவாத அமைப்பால் நடத்தப்பட்டுள்ளது.
பின்னணி
2023 அக்டோபரில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் வெடித்தது. இந்தப் போரில் ஹமாஸுக்கு ஆதரவாக, ஈரானின் ஆதரவு பெற்ற ஏமன் ஹவுதி பயங்கரவாத அமைப்பு களமிறங்கியது. ஹவுதிகள் செங்கடல் உட்பட பல்வேறு கடல் பகுதிகளில் அமெரிக்க சரக்குக் கப்பல்கள் மற்றும் பிற கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில், ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. தற்போது போர்நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், ஈரானைத் தொடர்ந்து ஏமன் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.
IDF, "அவர்கள் ஏவிய டஜன் கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வானில் இடைமறித்து சுட்டு வீழ்த்தினோம். ஏமன் மீது பதிலடித் தாக்குதல்களை நடத்தி வருகிறோம்" என்று தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |