இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் எதிரொலி! இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பு
இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே உள்ள பதற்றம் காரணமாக இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்புள்ளது.
இந்தியாவுக்கு சிக்கல்
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள், ராணுவ அலுவலகங்கள் மற்றும் தளவாடங்கள் ஆகியவை மீது ஆபரேஷன் ரைசிங் லயன் (Operation Rising Lion) என்ற பெயரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
தங்களின் மீதான அச்சறுத்தல் நீங்கும் வரை ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
உலகின் மூன்றாவது எண்ணெய் உற்பத்தியாளராக ஈரான் உள்ளது. இந்நிலையில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை 12 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலையானது 77 டொலரை எட்டியுள்ளது.
அதாவது இந்திய மதிப்பில் ரூ.6630 ஆகும். இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்புள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |