இஸ்ரேலின் மொத்த ராணுவ பலம் இது தான்... பல பில்லியன் டொலர் நிதியுதவியை குவிக்கும் அமெரிக்கா
உலகின் மிக சக்திவாய்ந்த 20 இராணுவங்களில் ஒன்றான இஸ்ரேலின் மொத்த ராணுவ பலம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
தடை விதித்துள்ள பாஸ்பரஸ் குண்டு
இஸ்ரேல் மீது ஹமாஸ் படைகள் திடீரென்று பலமுனை தாக்குதலை முன்னெடுத்து மிரள வைத்த பின்னர், கடந்த 3 நாட்களாக இஸ்ரேல் ராணுவ விமானங்கள் காஸா மீது கொடூர தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.
@reuters
ஐக்கிய நாடுகள் சபை தடை விதித்துள்ள பாஸ்பரஸ் குண்டுகளையும் காஸா மீது பொழிந்து வருகிறது. இதன் பின்னர், தரைவழியாக தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுக்கும் என்றே தகவல் கசிந்துள்ளது.
அத்துடன் 3 லட்சம் ராணுவ வீரர்களை திரட்டி, தயார் நிலையில் வைத்துள்ளதாகவும், ராணுவ டாங்கிகள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
@getty
சனிக்கிழமை திடீர் தாக்குதலை முன்னெடுத்த ஹமாஸ் படைகளில் சுமார் 1,500 ஆயுததாரிகள் காஸா எல்லையில் புகுந்து நூற்றுக்கணக்கானோரை கொன்று தள்ளியதுடன், பணயக்கைதிகளாக பலரையும் சிறை பிடித்துள்ளனர்.
ஆண்டுக்கு 3 பில்லியன் டொலர்
இதனையடுத்து கண்மூடித்தனமான தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ளது இஸ்ரேல். இந்த நிலையில் உலகின் மிக சக்திவாய்ந்த 20 இராணுவங்களில் ஒன்றான இஸ்ரேலின் பலம் குறித்து தரவுகள் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலிடம் 601 அதி நவீன ராணுவ விமானங்களும் தாக்குதலுக்கு பயன்படுத்தும் வகையில் 48 ஹெலிகொப்டர்களும் 2,200 ராணுவ டாங்கிகளும் உள்ளன. 300 பலமுனை ராக்கெட் வீச்சு அமைப்புகள் உட்பட 1,200 பீரங்கிகளும் இஸ்ரேல் ராணுவத்திடம் உள்ளன.
@afp
7 ராணுவ கப்பல்களும் 6 நீர்மூழ்கி கப்பல்களும் உள்ளன. மொசாட் உட்பட உலகின் மிகவும் பாராட்டப்பட்ட உளவுத்துறை அமைப்பை இஸ்ரேல் கொண்டுள்ளது. ராணுவத்திற்காக 2022ல் மொத்தம் 23.4 பில்லியன் டொலர்களை இஸ்ரேல் செலவிட்டுள்ளது.
ஆனால் 2021ல் செலவிட்டுள்ள தொகையில் இருந்து இது 4.2 சதவீதம் குறைவு என்றே கூறப்படுகிறது. அமெரிக்காவிடம் இருந்து ஆண்டுக்கு 3 பில்லியன் டொலர் நிதியுதவியை இஸ்ரேல் பெற்று வருகிறது.
மொத்தம் 4,000 பேர்கள்
2016ல் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா 10 ஆண்டுகளுக்கான சுமார் 38 பில்லியன் டொலர் ஆயுத ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டார். இதில் 5 பில்லியன் டொலர் தொகைக்கு ஏவுகணை வாங்க பயன்படுத்தப்படும் என்றே கூறப்பட்டது.
மட்டுமின்றி, கடந்த 20 ஆண்டுகளில் ரணுவ உதவிக்கென சுமார் 58 பில்லியன் டொலர் தொகையை அமெரிக்கா இஸ்ரேலுக்கு அளித்துள்ளது. தற்போது ஹமாஸ் படைகளின் தாக்குதலை அடுத்து, ஆயுத உதவிகளை வழங்க முன்வந்துள்ளது ஜோ பைடன் நிர்வாகம்.
@afp
அக்டோபர் 6ம் திகதி சனிக்கிழமை முன்னெடுத்த தாக்குதலை அடுத்து இதுவரை இரு தரப்பிலும் சேர்த்து மொத்தம் 4,000 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மதியத்திற்கு மேல் காஸா பகுதியில் மின்சாரம் தடைபட்டுள்ளதாகவும், குடிநீர் மற்றும் உணவு பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திங்கட்கிழமை முதல் இஸ்ரேல் உணவு விநியோகத்தை மொத்தமாக தடுத்து நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |