அமெரிக்கா அல்ல, இஸ்ரேல் முடிவு செய்யும்: கொந்தளிக்கும் பெஞ்சமின் நெதன்யாகு
காஸா அல்லது லெபனான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேலுக்கு எவர் ஒப்புதலும் தேவையில்லை என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எங்கள் தலைவிதியை
காஸாவிலும் லெபனான் தொடர்பில் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தங்கள் மேற்கொண்டிருக்கும் நிலையிலும் தாக்குதல் நீடிப்பது குறித்து எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நெதன்யாகு கொந்தளித்துள்ளார்.

இஸ்ரேல் ஒரு சுதந்திர நாடு என குறிப்பிட்டுள்ள நெதன்யாகு, நாங்கள் எங்கள் சொந்த முடிவுகளால் எங்களைப் பாதுகாத்துக் கொள்வோம், எங்கள் தலைவிதியை நாங்களே தொடர்ந்து தீர்மானிப்போம் என்றார்.
இதற்காக நாங்கள் யாருடைய ஒப்புதலையும் பெறப்போவதில்லை. எங்கள் பாதுகாப்பை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம் என்றார். ஆனால், காஸா மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதல்களுக்கு மட்டுமின்றி, இஸ்ரேலின் இதுவரையான அனைத்து இராணுவ நடவடிக்கைகளிலும் அமெரிக்கா தனது முழு ஆதரவையும் அளித்து வந்துள்ளது.
ஒப்புதல் தேவை இல்லை
வளைகுடா நாடான கத்தார் மீதான இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதலை அடுத்து, அமெரிக்கா கண்டனம் எதுவும் தெரிவிக்கவில்லை என்பதுடன், இனி அவ்வாறு நடக்காது என்று மட்டும் அறிவித்தது.

ஆனால், கத்தார் மீது ஈரான் நடத்திய தாக்குதலை அமெரிக்கா கடுமையாக கண்டித்ததுடன், பதிலடி உறுதி என்றும் எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையிலேயே, இஸ்ரேலின் எதிரிகள் மீது தாக்குதல் நடத்த ஒப்புதல் தேவை இல்லை என அமைச்சர்கள் கூட்டம் ஒன்றில் நெதன்யாகு பேசியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |