ஈரானுக்கு பலமாக பதிலடி கொடுக்கத் தயாராகும் இஸ்ரேல்: தாக்குதலுக்குத் தயாராகும் போர் விமானங்கள்
ஈரானுக்கு பலமாக பதிலடி கொடுக்க இஸ்ரேல் தயாராகிவருவதாக வெளியாகியுள்ள தகவல், மத்திய கிழக்கு நாடுகளில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
ஈரானுக்கு பலமாக பதிலடி கொடுக்கத் தயாராகும் இஸ்ரேல்
ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி இஸ்ரேல் மீது ஈரான் நிகழ்த்திய தாக்குதலுக்கு, தெளிவாகவும், பலமாகவும் பதிலடி கொடுக்க இஸ்ரேல் தயாராகிவருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஈரான் மீது தாக்குதல் நிகழ்த்துவதற்காக, இஸ்ரேல் தனது போர் விமானங்களை தயார் செய்துவருவதாகவும் செய்தி ஒன்று கூறுகிறது.
Image: AFP via Getty Images
ஈரானுக்கு தக்க பதிலடி கொடுப்பது எப்படி என திட்டமிடுவதற்காக, இஸ்ரேல் தலைவர்கள் நடத்திய இரண்டு போர் தொடர்பான கேபினட் கூட்டங்களைத் தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தொலைக்காட்சியான Channel 12 தெரிவித்துள்ளது.
Image: Anadolu via Getty Images
எப்போது தாக்குதல் நிகழ்த்தப்படும் என்பது குறித்த தெளிவான விவரம் வெளியிடப்படாத நிலையில், அமெரிக்க தயாரிப்பான F-16, F-15 மற்றும் F-35 போர் விமானங்கள் பதில் தாக்குதலுக்குத் தயாராகிவருவதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
Image: AFP via Getty Images
இப்படி ஒரு பலத்த தாக்குதலை ஈரான் நிகழ்த்தியபின், இஸ்ரேல் அதற்கு தக்க பதிலடி கொடுக்காமல் விடாது என்பதை ஈரானுக்குத் தெரியப்படுத்தும் வகையில் இந்த தாக்குதல் இருக்கும் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து, நேற்று, அதாவது, ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி பேசிய இஸ்ரேல் ராணுவ தலைவரான Lt. Gen Herzi Halevi, ஈரானின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
(AP Photo/Tomer Neuberg, File)(AP)
அதே நேரத்தில், இஸ்ரேல் பதிலடி கொடுத்தால், இஸ்ரேல் மீது இன்னும் மோசமான தாக்குதல் நிகழ்த்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளதுடன், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கினால், சிரியா, ஜோர்டான் மற்றும் ஈராக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |