60 ஆண்டுகளுக்கு முன் தூக்கிலிடப்பட்ட மொஸாட் உளவாளி: உடைமைகளை மீட்ட இஸ்ரேல்..யார் அவர்?
இஸ்ரேலுக்காக உளவு பார்த்த மொஸாட் உளவாளியின் உடைமைகள் 60 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்டுள்ளது.
மொஸாட் உளவாளி
ஒரு நாட்டிற்காக உளவு பார்க்கும் நபர் வேறொரு நாட்டில் சிக்கிக் கொண்டால் சொந்த நாடு அவரை கைவிட்டுவிடும்.
ஆனால், மொஸாட் உளவு அமைப்பை வைத்திருக்கும் இஸ்ரேல் எப்போதும் தமது உளவாளிகளை கைவிடுவதில்லை என்ற கூற்று நிலவுகிறது. அதற்கேற்றாற்போல் ஒரு விடயத்தைத்தான் இஸ்ரேல் தற்போது செய்துள்ளது.
பொதுவாக மொஸாட் உளவாளிகள் அமெரிக்காவின் சி.ஐ.ஏவை விட திறமை வாய்ந்த நபர்களாக இருக்க பயிற்சி பெறுவார்கள்.
தூக்கிலிடப்பட்ட கோஹன்
அந்த வகையில் சிரியாவிற்கு உளவு பார்க்க சென்றவர்தான் எலி கோஹன் (Eli Cohen). இவர் தனது நாட்டிற்காக இரகசியமாக சேகரித்துக் கொடுத்த தகவல்கள்தான், 1967ஆம் ஆண்டில் மத்திய கிழக்குப் போரில் வெற்றிபெற இஸ்ரேலுக்கு உதவியது.
1960களில் எலி கோஹன் சிரிய பாதுகாப்பு அமைச்சரின் உயர் ஆலோசகராகவே உயர்ந்தார். ஆனால், 1965ஆம் ஆண்டில் ரேடியோ மூலம் இஸ்ரேலுக்கு தகவல்களை அனுப்பும்போது சிரியாவிடம் பிடிபட்டார்.
விசாரணையின் முடிவில் அவர் டமாஸ்கஸ் சதுக்கத்தில், பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டார்.
அவரது உடல் சொந்தநாட்டிற்கு திருப்பி அனுப்பப்படவில்லை. எனினும் அவர் இஸ்ரேலில் ஒரு ஹீரோவாகவே கருதப்படுகிறார்.
2,500 பொருட்கள் மீட்பு
இந்த நிலையில், சிரியாவில் இருந்த கோஹனின் உடைமைகளை 60 ஆண்டுகளுக்கு பின் இஸ்ரேல் மீட்டுள்ளது. சிரியாவில் தற்போது இராணுவ ஆட்சி வீழ்த்தப்பட்டுள்ளதால் இது சாத்தியமாகியுள்ளது.
கோஹனுக்கு சொந்தமான சுமார் 2,500 பொருட்களை, சிரியா காப்பகத்தில் இருந்து இஸ்ரேல் மீட்டெடுத்துள்ளது.
அவற்றில் சில பொருட்களை கோஹனின் மனைவிடயிடம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வழங்கியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |