காசா எல்லைகளை கைப்பற்றியது இஸ்ரேல் ராணுவம்: தெற்கில் குவிந்த ராணுவ துருப்புகள்
காசா எல்லைகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலின் ராணுவத்திற்கு 5வது நாளாக சண்டை நடைபெற்று வருகிறது.
இரு தரப்பிற்கும் ஏற்பட்டுள்ள இந்த மோதலில் பாலஸ்தீனத்தை சேர்ந்த 900 மக்கள் வரை உயிரிழந்து இருப்பதாகவும், இஸ்ரேலை பொறுத்தவரை 1200 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
AP
இஸ்ரேலின் இரும்பு கோட்டை என்று அழைக்கப்படும் பாதுகாப்பு எல்லையை தாண்டி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் சனிக்கிழமை தங்கள் தாக்குதலை தொடங்கினர்.
மேலும் இஸ்ரேலின் காசா எல்லை பகுதியை ஹமாஸ் அமைப்பினர் ஆக்கிரமிப்பும் செய்தனர்.
கட்டுப்பாட்டுக்குள் வந்த காசா எல்லைகள்
இந்நிலையில் போர் தொடங்கிய காசா எல்லைப் பகுதியை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
அங்குள்ள பல பகுதிகள் மற்றும் சாலைகளை மீட்டு இஸ்ரேல் ராணுவம் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பினரின் இந்த திடீர் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் தங்களது வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலை அதிகரிக்க செய்தது.
அத்துடன் கனரக ராணுவ தளவாடங்கள் மற்றும் ரிசர்வ் படைகள் அழைக்கப்பட்டு இஸ்ரேலின் அதிகப்படியான ராணுவ துருப்புகள் தெற்கு இஸ்ரேல் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் அமெரிக்காவில் இருந்து அதிநவீன ஆயுதங்களின் முதல் விமானம் இஸ்ரேலில் வந்து இறங்கி இருப்பதாகவும் அந்த நாட்டு ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |