ஒவ்வொரு 30 நொடிக்கும் காஸா மீது பீரங்கி துப்பாக்கிச் சூடு நடத்திய இஸ்ரேல்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
அக்டோபர் 6ம் திகதி சனிக்கிழமை தொடங்கி, இதுவரை காஸா மீது 6,000 வெடிகுண்டுகளை இஸ்ரேல் வீசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஸ்பரஸ் குண்டுகள்
ஐக்கிய நாடுகள் மன்றம் தடை விதித்துள்ள பாஸ்பரஸ் குண்டுகளையும் காஸாவின் முக்கிய பகுதிகளில் இஸ்ரேல் வீசியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு அம்பலப்படுத்தியுள்ளது.
@afp
ஹமாஸ் ஆயுததாரிகள் முன்னெடுத்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து, அந்த அமைப்பையே மொத்தமாக அழிக்க சூளுரைத்துள்ள இஸ்ரேல், 30 நொடிகளுக்கு ஒருமுறை காஸா மீது தாக்குதல் தொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் உருவாகி 75 ஆண்டுகளுக்கு பிறகு, எதிர்கொள்ளும் மிகவும் கோரமான தாக்குதல் சம்பவமாக பார்க்கப்படுகிறது. போர் பிரகடனம் செய்த பின்னர் 6 நாட்களாக இஸ்ரேல் கடுமையான தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
@getty
மட்டுமின்றி, காஸா மீது தரைவழி தாக்குதலுக்கும் இஸ்ரேல் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதன் ஒருபகுதியாக காஸா பகுதியில் டாங்கிகள் மற்றும் கனரக ஆயுதங்களை குவித்துள்ளதுடன், 300,000 வீரர்களை தயார் நிலையில் வைத்துள்ளது.
மொத்தமாக அழிக்கப்படும்
வியாழனன்று அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல், சனிக்கிழமையிலிருந்து மொத்தம் 4,000 டன் வெடிபொருட்களைக் கொண்ட சுமார் 6,000 வெடிகுண்டுகளை காஸா மீது வீசித் தாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், காசா எல்லையில் உள்ள பகுதிகளில் இஸ்ரேல் துருப்புக்கள் 150 மிமீ பீரங்கிகளை நிலைநிறுத்தியுள்ளனர். ஒவ்வொரு முறையும் சுடப்படும்போது, நிலம் நடுங்குகிறது, காதைப் பிளக்கும் சத்தம் காற்றை நிரப்புகிறது என கூறுகின்றனர்.
@afp
மிக விரைவில் காஸா பகுதியில் இருந்து இனி எவரும் தாக்குதல் முன்னெடுக்காதவாறு சூழலை உருவாக்குவோம் என இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன் தரப்பில் இதுவரை 1,350 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹமாஸ் அமைப்பு மொத்தமாக அழிக்கப்படும் வரையில் போர் தொடரும் என்றே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார்.
உலக நாடுகள் ஐ.எஸ் பயங்கரவாதிகளை ஒடுக்கியது போல, ஹமாஸ் படையினரை ஒடுக்க இருப்பதாகவும் நெதன்யாகு மிரட்டல் விடுத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |