44 பேர் பலி.. 38 பேர் கவலைக்கிடம்! திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு நசுங்கி உயிரிழந்த துயரம்
இஸ்ரேலின் வடகிழக்கில் நடந்த ஒரு யூத மத திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் நசுங்கி குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மெரான் மலையின் அடிவாரத்தில் இடம்பெற்ற Lag B'Omer திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட 103 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் 38 பேரின் நிலைமை கவலைகிடமாக உள்ளது என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி முழுவதையும் முடக்கி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பொலிசார், விழாவில் பங்கேற்றவர்கள் பேருந்து மூலம் பத்திரமாக அப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டனர்.
இது ஒரு பெரிய பேரழிவு என்று குறிப்பிட்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, உயிரிழந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்வதாகவும் கூறினார்.
இஸ்ரேலில் விதிக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து நாட்டில் நடந்து முதல் பெரிய திருவிழவான Lag B'Omer-வில் 10,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
کاربران شبکههای اجتماعی اشتباهات لجستیکی پلیس را عامل لگدمال شدن یهودیان زیر دست و پای یکدیگر در جشن Lag Baomer میدانند. pic.twitter.com/8dBrqLU7vN
— خبرآنلاين (@khabaronlinee) April 30, 2021
மீட்பு பணிதொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.