தண்ணீரின்றி தவிக்கும் 20 லட்சம் காசா மக்கள்: ஐக்கிய நாடுகள் சபை பகீர் தகவல்
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் வசிக்கும் 20 லட்சம் மக்கள் தண்ணீரின்றி தவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்- ஹமாஸ் போர்
இஸ்ரேல்-பாலஸ்தீன போர் மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று காசா நகருக்குள் இஸ்ரேலிய ராணுவம் புகுந்து பிணைக் கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இதுவரை இஸ்ரேல் தாக்குதலில் மொத்தம் 2,215 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 8,714 படுகாயமடைந்து இருப்பதாகவும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thousands of buildings have been destroyed. Mass casualties are unlike anything seen in past years. The medical system is on its knees.
— ICRC (@ICRC) October 14, 2023
? As Gaza loses power, hospitals lose power
? Water cannot be pumped
❌Sewage systems will likely flood
People have nowhere else to go. pic.twitter.com/xb1H8nRKHc
இதற்கிடையில் வெளிநாட்டு குடியுரிமையை வைத்திருக்கும் பாலஸ்தீனியர்கள் ரஃபா எல்லை கடந்து செல்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தூதரகங்களில் இருந்து மின்னஞ்சல் தகவல்களைப் பெற்றனர்.
தண்ணீர் கிடைக்காத நிலை
இந்நிலையில் காசாவில் 20 லட்சம் மக்கள் தண்ணீரின்றி தவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
மேலும் இஸ்ரேல் அனைத்து விதமான குடிநீர் ஆதார வழிகளையும் இஸ்ரேல் அடைத்து விட்டதால் ஆபத்தான நிலை ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
“There is no clean drinking water, no sufficient food, and no bathrooms.”
— UNICEF (@UNICEF) October 14, 2023
Time is running out for children in Gaza. UNICEF is continuing to respond to their critical needs but access is becoming increasingly difficult and dangerous. pic.twitter.com/aludnWyuhc
அத்துடன் பாலஸ்தீனத்தின் காசா நகரில் மின்சார விநியோகமும் தடை செய்யப்பட்டு இருப்பதால் மக்கள் கடுமையான அவதி அடைந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |