எல்லை மீறும் இஸ்ரேல்..! ஐ.நாவின் தங்குமிடமாக மாற்றப்பட்ட பள்ளிகள் மீது தாக்குதல்: 20 பேர் பலி
காசாவில் ஐக்கிய நாடுகள் சபையால் பள்ளிகளில் இருந்து மக்கள் தங்குமிடமாக மாற்றப்பட்ட கட்டிடங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
அகதிகள் முகாம் மீது தாக்குதல்
இஸ்ரேல்-ஹமாஸ் படையினர் இடையிலான போர் தாக்குதல் 27 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
காசாவிற்குள் தரைவழி தாக்குதலை முன்னெடுத்து வரும் இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை கூண்டோடு அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
Reuters
அந்த வகையில் ஹமாஸ் அமைப்பினரின் இராணுவ தளங்களை குறி வைப்பதாக தெரிவித்து கடந்த இரண்டு நாட்களாக வடக்கு காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் அமைந்துள்ள பகுதிகள் மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு, பலர் படுகாயம் அடைந்து வருகின்றனர்.
ஐ.நாவின் தங்குமிடம் மீது தாக்குதல்
இந்நிலையில் காசாவின் ஜபாலியாவில் ஐக்கிய நாடுகள் சபையால் பள்ளிகளில் இருந்து மக்கள் தங்குமிடமாக மாற்றப்பட்ட கட்டிடங்கள் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
Reuters
இந்த தாக்குதலில் 20 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டதுடன், 5 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4 ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனத்தின் தங்கும் இடங்கள் இஸ்ரேலிய தாக்குதலில் சேதமடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
“காசாவில் ஐக்கிய நாடுகள் சபையின் கொடிக்கு கீழ் இருக்கும் தற்காலிக தங்குமிடங்கள் மிகவும் பாதுகாப்பானது” என கூற்றுகள் உலா வருவது குறிப்பிடத்தக்கது.
Palestinian children play in the yard of a packed UN school turned into a shelter in Der El Balah in central Gaza Strip. Over 1 million Palestinian civilians were displaced as a result of Israel’s latest war. (Wafa) #GazaUnderAttack #Gaza #Palestine pic.twitter.com/mSQFNeOzJ8
— Palestine in the UK (@PalMissionUK) October 16, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |