பொறுத்திருந்து பழி தீர்த்த இஸ்ரேல்... பற்றியெரியும் ஏமன் துறைமுக நகரம்
இஸ்ரேலின் டெல் அவீவ் நகரை உலுக்கிய ட்ரோன் தாக்குதலுக்கு பழி தீர்க்கும் வகையில், ஏமனின் துறைமுக நகரம் மீது மிகப்பெரிய தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்துள்ளது.
தாக்குதலுக்கு பதிலடி
ஈரான் ஆதரவு ஹவுதிகளின் தாக்குதலுக்கு பழி தீர்க்கும் வகையில், ஏமனின் செங்கடல் துறைமுக நகரமான Hodeidah மீது மிக மோசமான தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்துள்ளது.
குறித்த தகவலை இஸ்ரேல் ராணுவம் தற்போது உறுதி செய்துள்ளது. இஸ்ரேலின் டெல் அவீவ் நகரம் மீது ஹவுதிகள் முன்னெடுத்த தாக்குதலுக்கு பதிலடியாகவே தொடர்புடைய வான் தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்துள்ளது.
வெளியான முதற்கட்ட தகவலில், Hodeidah நகரில் அமைந்துள்ள எண்ணெய்க் கிடங்குகள் மற்றும் மின் உற்பத்தி நிலையம் ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றே கூறப்படுகிறது.
தாக்குதல் நடந்த பகுதி தற்போது தீக்காடாக காணப்படுகிறது. இதனிடையே மருத்துவ அதிகாரிகள் தரப்பு வெளியிட்டுள்ள தகவலில், இஸ்ரேலின் வான் தாக்குதலில் உயிரபாயம் ஏற்பட்டுள்ளது உறுதி என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எண்ணிக்கை தொடர்பில் தகவல் இல்லை.
ஆனால் இஸ்ரேல் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், ஏமனின் ராணுவ முகாம்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். காஸா மீதான போருக்கு பின்னர் ஹவுதிகளுக்கு எதிராக இஸ்ரேல் முன்னெடுக்கும் நேரிடையான முதல் தாக்குதல் இதுவென கூறப்படுகிறது.
இஸ்ரேலின் எதிரிகளுக்கு எச்சரிக்கை
மத்திய கிழக்கு முழுவதும் போர் அபாயம் அதிகரிக்கும் என்ற அச்சத்தின் மத்தியில் இஸ்ரேல் இந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளது. இதனிடையே, ஹவுதிகளின் செய்தித் தொடர்பாளர் முகமது அப்தெல் சலாம் தெரிவிக்கையில்,
காஸா மக்களை ஆதரிப்பதை நிறுத்துமாறு ஏமனுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இஸ்ரேல் முன்னெடுத்த கொடூரமான தாக்குதல் இதுவென குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர்களின் கனவு ஒருபோதும் பலிக்கப்போவதில்லை என்றார்.
ஏமன் மீதான இஸ்ரேலின் தாக்குதலை ஹமாஸ் அமைப்பும் உடனடியாக கண்டித்துள்ளது. ஆனால், இந்த தாக்குதல் இஸ்ரேலின் எதிரிகளுக்கு ஒரு எச்சரிக்கை என அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் Yaov Gallant தெரிவித்துள்ளார்.
ஹவுதிகள் 200 முறை தங்கள் மீது தாக்குதல் தொடுத்துள்ளதாகவும், முதல் முறையாக அவர்கள் இஸ்ரேல் குடிமகன் ஒருவரின் உயிரைப் பறித்ததாகவும், அதனாலையே தாக்குதல் முன்னெடுத்ததாகவும், தேவைப்படும் இடத்தில் எல்லாம் நாங்கள் இதைச் செய்வோம் என்றும் Yaov Gallant மிரட்டல் விடுத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |