வாஷிங்டனின் கோரிக்கை; காஸாவிற்கு 140,000 லிட்டர் எரிபொருளை அனுமதிக்க இஸ்ரேல் முடிவு!
காஸாவிற்கு 140,000 லிட்டர் எரிபொருளை அனுமதிக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.
இஸ்ரேலின் போர் அமைச்சரவை வாஷிங்டனின் வேண்டுகோளுக்குப் பிறகு ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் 140,000 லிட்டர் (36,985 கேலன்கள்) எரிபொருளை காஸாவிற்குள் அனுமதிக்க ஒப்புக்கொண்டது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
அக்டோபர் 7 அன்று 1,200 பேரைக் கொன்று 240 பணயக்கைதிகளைப் பிடித்துக் கொண்ட பாலஸ்தீனிய போராளிக் குழுவின் தாக்குதலுக்கு பதிலடியாக, ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காசாவிற்குள் நுழையும் அனைத்து பொருட்களுக்கும் இஸ்ரேல் கடுமையான தடை விதித்திருந்தது.
இந்நிலையில், கடுமையான சோதனைகளுக்குப் பிறகு உதவி டிரக்குகளை அனுமதிக்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டது.
இதனிடையே, ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனம் (UNRWA) புதன்கிழமை உதவி விநியோக டிரக்குகளை நகர்த்துவதற்கு ஒரு சிறிய அளவு எரிபொருளை ஒதுக்கியது.
ஐநாவின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஒரு நாளைக்கு இரண்டு டிரக்குகள் அனுமதிக்கப்படும் என்று இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் 140,000 லிட்டர் (36,985 கேலன்கள்) எரிபொருளை காஸாவிற்குள் அனுமதிக்கப்படும். அதில் தொலைத்தொடர்பு நிறுவனமான பால்டெல்லின் மின் உற்பத்தியாளர்களுக்கு 20,000 லிட்டர்கள் (5,280 கேலன்கள்) ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
israel Hamas, Israel to allow some fuel into Gaza