நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள்! குடியிருப்பை வந்து தாக்கிய ஏவுகணை: மரண பீதியில் பாலஸ்தீனர்
இஸ்ரேல் நள்ளிரவில் திடீரென்று நடத்திய ஏவுகணை தாக்குதலில், குடியிருப்பு ஒன்று தரைமட்டமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே, பாலஸ்தீனத்தின் காஜா பகுதியில் இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகிறது. ஏனெனில், ஜெருசலேமில் உள்ள பாலத்தீன மக்கள் தொழுகை நடத்தும் அல் அக்சா மசுதிக்குள் புகுந்து இஸ்ரேல் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.
இதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இஸ்ரேலுக்குள் காஸாவில் உள்ள ஹமாஸ் போர்ப்படை தாக்குதல் நடத்தியது. சிறிய ரக ராக்கெட்டுகளை வீசி ஹமாஸ் இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் காஸாவில் வான்வெளி தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த மோதல் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.
Photo of a launch from #Gaza this evening towards #TelAviv, #Israel pic.twitter.com/YZ5sL9VPWP
— Aurora Intel (@AuroraIntel) May 15, 2021
இதில் ஹமாஸ் படை தினமும் கிட்டத்தட்ட 100-க்கும் அதிகமான ராக்கெட்டுகளை இஸ்ரேல் மீது ஏவி உள்ளது. அதே சமயம் இஸ்ரேல் ஹமாஸ் படைகள் இருக்கும் இடங்களை குறி வைத்து காஸாவில் தினசரி 100-200 விமான தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த இருவருக்கும் இடையே மோதலில், அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். இஸ்ரேலின் திடீர் ஏவுகணை தாக்குதல்களால், மக்கள் எங்கு போய் தப்பிப்பது என்று கூட தெரியாமல் தவித்து வருகின்றனர்.
Palestinian citizens are helping rescue teams in searching for survivors under the rubbles of houses bombed by "Israel" tonight. So far, reports confirm: 5 survived, 2 killed, 25 injured. There are many others still buried.#Gaza #GazaUnderAttack pic.twitter.com/olJuj3HLrJ
— Quds News Network (@QudsNen) May 16, 2021
இஸ்ரேல்-பாலஸ்தீனத்திற்கு இடையேயான இந்த பிரச்சனை, ஒரு போர் போன்று காட்சியளிக்கிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு பாலஸ்தீனத்தில் இருக்கும் குடியிருப்பு ஒன்றில் மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், எந்த ஒரு அறிவிப்பும் இன்றி, இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில், தற்போது வரை கிடைத்த தகவலின் படி 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் அந்த இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று கூறப்படுகிறது.
The Palestinian resistance has fired scores of rockets at Tel Aviv in retaliation for Israel’s attacks on the Gaza Strip. pic.twitter.com/0i2IzL0fwl
— Press TV (@PressTV) May 16, 2021