காசாவை விட்டு இஸ்ரேலிய படைகள் வெளியேறாது! நெதன்யாகு விடுத்த எச்சரிக்கை
ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கைவிடும் வரை காசாவில் இஸ்ரேலிய படைகள் நிலைநிறுத்தப்படும் என்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அமுலுக்கு வந்த போர் நிறுத்தம்
அமெரிக்காவின் முன்னெடுப்பில் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தமானது இஸ்ரேலின் உள்ளூர் நேரப்படி பகல் 12 மணிக்கு நடைமுறைக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து பேசிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் ஆயுதங்களை முழுமையாக ஒப்படைக்கும் வரை அதன் மீதான அழுத்தத்தை தொடர்ந்து இறுக பிடிப்பதற்காக காசா பிராந்தியத்தில் இஸ்ரேலிய படைகள் தொடர்ந்து நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அமைதி ஒப்பந்தத்தில் குறிப்பிட்டது போல பின்வாங்கல் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்தாலும், ஹமாஸ் பாலஸ்தீன அரசாங்கத்திடம் இருந்து முழுமையாக வெளியேறியும் வரை இஸ்ரேலிய படைகள் வெளியேற போவதில்லை என்றும் எச்சரித்துள்ளார்.
அத்துடன் இது எளிய வழியில் அடையப்பட வேண்டும் அல்லது கடினமான வழியில் அடையப்படும் என்றும் ஹமாஸுக்கு நெதன்யாகு எச்சரிக்கை விடுத்தார்.
ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றான பிணைக் கைதிகள் விடுவிப்பு எதிர்வரும் நாட்களில் நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |