காசா மீது எறியப்படும் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள்: அலறும் பாலஸ்தீனியர்கள்
பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலின் போது இஸ்ரேல் தடை செய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்துவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
பாலஸ்தீனியர்கள் குற்றச்சாட்டு
ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் மீது அத்துமீறி திடீர் தாக்குதலை தொடங்கிய பிறகு, போர் பிரகடனத்தை அறிவித்து இஸ்ரேல் தனது பதிலடி தாக்குதலை தொடங்கியது.
இதையடுத்து காசாவில் உள்ள பொது கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மீது இஸ்ரேல் ராக்கெட் தாக்குதலை தீவிரமாக நடத்தி வருகிறது.
சமீபத்தில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுத்து இருப்பதுடன், இஸ்லாமிய ஜிஹாத் ஏவிய ராக்கெட் ஒன்று குறி தவறி காஸாவின் அல் அஹ்லி மருத்துவமனை மீது விழுந்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில் போர் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவம் தடை செய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்துவதாக பாலஸ்தீனியர்கள் அலறுகின்றனர்.
இது தொடர்பாக வீடியோவை வெளியிட்டு பாலஸ்தீனியர்கள் சர்வதேச சமூகத்திடம் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர்.
வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள்
வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் என்பது 1000 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தையும், நெருப்பையும் உமிழக் கூடியது.
Phosphorus bombs used by lsrael in my village! #Gaza pic.twitter.com/Dm21uPCDnU
— Muhammad Smiry ?? (@MuhammadSmiry) October 9, 2023
நெருப்புக் கோளமாக வெடித்துச் மனிதர்களை தீவிர தீக்காயங்களுடன் நடைபிணமாக முடக்கக்கூடியவை.
இவற்றை போரில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது, அத்துடன் அதை போர்களில் பயன்படுத்துவது போர் குற்றமாகவும் பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |