ரஃபாவில் இஸ்ரேலின் குண்டுவீச்சில் 42 பேர் பலி: 50 பேர் காயம்
காசாவின் தெற்கு நகரமான ரஃபாவுக்கு அருகில் உள்ள அல்-மவாசியில் உள்ள பாலஸ்தீனிய முகாம்கள் மீது இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை (ஜூன் 21) குண்டுவீசினர்.
இதில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். காஸா அரசாங்க ஊடக அலுவலகம் அல் ஜசீராவிடம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.
முன்னதாக, பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் இஸ்ரேலிய தாக்குதலில் குறைந்தது 25 பேர் இறந்ததாகவும், 50 பேர் காயமடைந்ததாகவும் கூறியது.
ஆனால் இப்போது உண்மையான பலி எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளது
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்த சண்டையில் லட்சக்கணக்கான மக்கள் வெளியேறிய சிறிய பாலஸ்தீனியப் பகுதியான ரஃபாவில் நடந்த சமீபத்திய கொடிய தாக்குதல் இதுவாக்கும்.
ஹமாஸ் போராளிகளையும் இலக்குகளையும் குறிவைப்பதாக இஸ்ரேல் அடிக்கடி கூறி வருகிறது. ஆனால், இந்த தாக்குதல்களில் பொதுமக்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
ஆனால், பயங்கரவாதிகள் பொதுமக்கள் மத்தியில் இருந்துகொண்டு செயல்படுவதாக இஸ்ரேல் கூறுகிறது. இதனால் அதனால் அப்பாவி மக்களும் தாக்குதல்களில் உயிரிழக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |