போருக்கு எங்களை தூண்ட வேண்டாம்... இஸ்ரேலுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த நாடு
காஸா பகுதியில் இஸ்ரேல் முன்னெடுக்கும் கொடூர தாக்குதல் என்பது, இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட தூண்டுவது போல உள்ளது என எச்சரித்துள்ளார் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி.
காஸா மக்கள் மீது
அக்டோபர் 7ம் திகதிக்கு பின்னர் இஸ்ரேல் ராணுவம் காஸா மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை தொடுத்து வருகிறது. ஈரானும் ஒவ்வொரு முறையும் கடுமையான வார்த்தைகளால் கண்டனம் தெரிவித்தும் வருகிறது.
@getty
இஸ்ரேலின் பதில் தாக்குதலுக்கு இதுவரை பாலஸ்தீன மக்கள் 8,000 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் சரிபாதி பேர்கள் சிறார்கள் என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில், சியோனிச ஆட்சியின் குற்றங்கள் அனைத்து வரைமுறைகளையும் மீறியுள்ளது, இது அனைவரையும் நடவடிக்கை எடுக்க கட்டாயப்படுத்தலாம் என குறிப்பிட்டுள்ளார் இப்ராஹிம் ரைசி.
நிதியுதவியும் ஆயுத உதவிகளும்
அவசரப்பட வேண்டாம் என எங்களைக் கேட்டுக்கொண்டுள்ள அமெரிக்கா, மறுபக்கம் இஸ்ரேலுக்கு மொத்த உதவிகளையும் செய்கிறது என்றார்.
@ap
ஹமாஸ் படைகளுக்கு நிதியுதவியும் ஆயுத உதவிகளும் அளித்து வரும் ஈரான், அக்டோபர் 7ம் திகதி நடந்த தாக்குதலை ஹமாஸ் படைகளின் வெற்றி என குறிப்பிட்டிருந்தது. ஆனால் படுகொலை சம்பவங்களுக்கு ஹமாஸ் பொறுப்பல்ல எனவும் குறிப்பிட்டிருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |