காசாவில் உதவிப் பொருட்களுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: 44 பேர் உயிரிழப்பு!
காசாவில் உதவிப் பொருட்களுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காசா மீது இஸ்ரேல் தாக்குதல்
காசா முனையில் மனிதாபிமான உதவிகளை எதிர்பார்த்துக் காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேலியப் படைகளும் ஆளில்லா விமானங்களும் நடத்திய இருவேறு தாக்குதல்களில் குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் இந்த உயிரிழப்புகளையும் ஏராளமான காயமடைந்தோரையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஒரு மோசமான சம்பவத்தில், காசாவின் மத்தியப் பகுதியில் உள்ள வாடி காசாவின் தெற்கே ஒரு சாலையில் உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறிகளை நோக்கி மக்கள் நகர்ந்தபோது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அசோசியேட்டட் பிரஸ் (ஏபி) செய்தி நிறுவனத்திடம் சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிலருக்கு சிகிச்சையளித்த நுசெய்ரத் அகதிகள் முகாமில் உள்ள அவ்லா மருத்துவமனை, 25 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 146 பேர் காயமடைந்ததாகவும் உறுதிப்படுத்தியுள்ளது.
காயமடைந்தவர்களில் 62 பேர் கவலைக்கிடமான நிலையில் இருந்தனர், அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மற்ற மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |