நெதன்யாகு தொடர்பில் ட்ரம்பிடம் கோரிக்கை வைத்த இஸ்ரேல் முன்னாள் தளபதிகள்
மேற்குக் கரையில் குடியேற்றவாசிகளின் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துமாறு நெதன்யாகுவை வலியுறுத்தும்படி ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை இஸ்ரேல் முன்னாள் தளபதிகள் உட்பட நூற்றுக்கணக்கான அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
உதவக்கூடிய ஒரே நபர்
செவ்வாய்க்கிழமையன்று வெளியிடப்பட்ட கடிதம் ஒன்றில், ஏறக்குறைய 600 முன்னாள் அதிகாரிகள் ட்ரம்ப்பிடம் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேற்குக் கரையில் வன்முறை அதிகரிப்பதன் மூலம் ஏற்படக்கூடிய பேரழிவையும், அதனால் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய விளைவுகளையும் தவிர்க்க உதவக்கூடிய ஒரே நபர் அவர்தான் என்று அவர்கள் அதில் குறிப்பிட்டிருந்தனர்.
மேற்குக் கரையில் தீவிரமடைந்து வரும் வன்முறையை விரைவாகவும் உறுதியாகவும் கட்டுப்படுத்தாவிட்டால், அது அப்பகுதி முழுவதிலும் பெரும் பதற்றத்தைத் தூண்டக்கூடும்; அத்துடன், இஸ்ரேலின் பாதுகாப்பு மற்றும் அப்பகுதியில் அமெரிக்காவின் நலன்கள் ஆகிய இரண்டின் மீதும் இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், இந்தத் துயரத்தைத் தவிர்க்க உங்களைத் தவிர வேறு யாராலும் முடியாது என்பதே எங்கள் தொழில்முறை சார்ந்த கணிப்பு என்றும் ட்ரம்பிடம் கோரியுள்ளனர்.
CIS என அறியப்படும் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான தளபதிகள் என்பது ஓய்வுபெற்ற 550-க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய ராணுவ கர்னல்கள் மற்றும் ஜெனரல்கள், அத்துடன் மொசாத், ஷின் பெட், இஸ்ரேலியக் காவல்துறை, வெளிவிவகார அதிகாரிகள் மற்றும் பிற பிரிவுகளில் அதற்கு இணையான பதவிகளை வகித்தவர்களை உள்ளடக்கிய சியோனிச இயக்கமாகும்.
யூத மக்களின் வலுவான ஜனநாயக இல்லமாக இஸ்ரேலின் எதிர்காலத்தை உறுதி செய்வதே இந்த அமைப்பின் குறிக்கோளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியேறிகள் மற்றும் இஸ்ரேலியப் படைகளைச் சட்டத்தின் கண்காணிப்பிலிருந்து பாதுகாப்பது உட்பட, இக்குழப்பத்தின் பெரும்பகுதியை அரசாங்கத்தைச் சேர்ந்த சிலரே திட்டமிட்டு நடத்துகிறார்கள் என்பது ரகசியமான ஒன்றல்ல என்றும் CIS பதிவு செய்துள்ளது.
ஏழாவது பயணம்
மேலும், யூதக் குடியேறிகளின் பயங்கரவாதச் செயல்பாடுகள் அதிகரித்து வருவது, அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் படைகள் நடத்திய தாக்குதல் மற்றும் அதனால் பல முனைகளிலும் ஏற்பட்ட விளைவுகளை விடவும் மிக மோசமான பேரழிவை ஏற்படுத்தக்கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
வாஷிங்டனில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள சந்திப்பில், நெதன்யாகுவிடம் இந்த விவகாரத்தை எழுப்புமாறு அந்த அமைப்பு ட்ரம்ப்பை வலியுறுத்தியுள்ளது.

ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் வெள்ளை மாளிகைக்கு மேற்கொள்ளும் தனது ஏழாவது பயணத்தின் ஒரு பகுதியாக, செவ்வாய்க்கிழமையன்று ட்ரம்ப்பை நெதன்யாகு சந்திக்கவுள்ளார்.
மேலும், ஈரானுக்கு ஆதரவாக ஹவுதிகள் செங்கடலை முற்றுகையிட்டுள்ளதுடன், ஈரான் மீதான தாக்குதலை சமீபத்தில் தீவிரப்படுத்தியதுடன், திடீரென்று அமெரிக்க இராணுவம் நிறுத்தியதன் சில நாட்களில் நெதன்யாகு அமெரிக்கா பயணப்படுகிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |