ஹமாஸ் படைகள் அல்ல... சொந்த மக்களையே காவு வாங்கிய இஸ்ரேல் ராணுவம்: வெளிவரும் பகீர் பின்னணி

Israel Israel-Hamas War Gaza
By Arbin Sep 08, 2024 11:26 PM GMT
Report

இஸ்ரேல் எல்லையில் கடந்த அக்டோபர் மாதம் 1,200 பேர்கள் கொல்லப்பட்டதன் பின்னணியில் முழுமையாக ஹமாஸ் படைகள் இல்லை என்ற தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது.

1,000 கடந்ததன் மர்மம்

கடந்த அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் எல்லையில் ஒரு இசை விழாவின் போது அதிரடியாக தாக்குதலை முன்னெடுத்த ஹமாஸ் படைகள் 1,200 பேர்களை கொன்றதாக தகவல் வெளியானது.

ஹமாஸ் படைகள் அல்ல... சொந்த மக்களையே காவு வாங்கிய இஸ்ரேல் ராணுவம்: வெளிவரும் பகீர் பின்னணி | Israeli Forces Accused Killing Their Own Citizens

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் முன்னெடுத்துவரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 41,000 தொட்டுள்ளது.

ஆனால், அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் படைகள் வெறும் துப்பாக்கியுடன் தாக்குதல் நடத்த, பலி எண்ணிக்கை 1,000 கடந்ததன் மர்மம் என்ன என்பது தொடர்பில் விசாரணை முன்னெடுத்த சில பத்திரிகையாளர்கள், தற்போது உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.

அக்டோபர் 7ம் திகதி நடந்த களேபரத்தில் இஸ்ரேல் ராணுவம் சொந்த மக்களை கொன்று குவித்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். ஹமாஸ் படைகளை எதிர்கொண்ட இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டே சொந்த மக்களையும் கொன்றுள்ளது.

இதில், இஸ்ரேல் ராணுவம், ஹெலிகொப்டர் விமானிகள், பொலிசார் என பலருக்கும் பங்குள்ளதாக கூறப்படுகிறது. உயிர் தப்பியுள்ள பலர் சம்பவத்தன்று இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கையை சந்தேகத்துடன் நினைவுகூர்ந்துள்ளனர்.

ஹமாஸ் படைகள் அல்ல... சொந்த மக்களையே காவு வாங்கிய இஸ்ரேல் ராணுவம்: வெளிவரும் பகீர் பின்னணி | Israeli Forces Accused Killing Their Own Citizens

இஸ்ரேல் ராணுவத்தின் ரகசிய உத்தரவு காரணமாகவே அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 1986ல் எழுதப்பட்ட ரகசிய கோட்பாட்டின்படி எதிரிகளால் இஸ்ரேல் ராணுவத்தினர் கடத்தப்படும் நிலை ஏற்பட்டால், பணயக்கைதிகளுக்கு ஆபத்தாக முடியும் என்றால் கூட இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை நடத்தலாம் என கூறப்படுகிறது.

இதையே அக்டோபர் 7ம் திகதியும் இஸ்ரேல் ராணுவம் முன்னெடுத்துள்ளது. ஹமாஸ் படைகளை பொறுத்தமட்டில் இஸ்ரேல் ராணுவத்தினரை கடத்துவதும் பதிலுக்கு பாலஸ்தீன மக்களை விடுவிக்க கோருவதும் வாடிக்கையாக செய்து வந்தனர்.

கடந்த 2011ல் ஒரே ஒரு இஸ்ரேல் ராணுவ வீரருக்காக ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீன கைதிகளை விடுவித்துக்கொண்டது. இதில் தற்போதைய ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரும் விடுதலையானார்.

இஸ்ரேல் ராணுவம்

அக்டோபர் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவம் ரகசிய கோட்பாட்டினை பின்பற்றியதாகவே தகவல் கசிந்துள்ளது. சம்பவத்தன்று காஸாவுக்கு திரும்பிய வாகனங்கள் மீது இஸ்ரேல் ஹெலிகொப்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த வாகனங்களில் இஸ்ரேல் பணயக்கைதிகள் இருப்பதை தெரிந்தே தாக்குதலை நடத்தியுள்ளனர்.

காஸா மற்றும் இஸ்ரேல் எல்லையை கடக்க முயன்ற மக்கள் மீது அக்டோபர் 7ம் திகதி கடுமையான தாக்குதலை முன்னெடுத்ததாக இஸ்ரேல் விமானப்படை விமானிகள் தெரிவித்துள்ளனர்.

ஹமாஸ் படைகள் அல்ல... சொந்த மக்களையே காவு வாங்கிய இஸ்ரேல் ராணுவம்: வெளிவரும் பகீர் பின்னணி | Israeli Forces Accused Killing Their Own Citizens

போரில் பயன்படுத்தப்படும் மொத்தம் 28 ஹெலிகொப்டர்கள் குறித்த நாள் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தீவிரவாதிகளை மொத்தமாக அழிக்கும் திறன் கொண்ட தாக்குதல் அது என்றும், ஆனால் அந்த எண்ணிக்கையில் ஹமாஸ் படைகள் எல்லை கடக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே ராணுவ டாங்கிகளும் களமிறக்கப்பட, வாகனங்களை குறி வைத்து தாக்கியுள்ளனர். காஸா பகுதிக்கு தப்ப முயன்ற மொத்தம் 70 வாகனங்கள் முழுமையாக தாக்கி அழிக்கப்பட்டதாகவும், அதில் பயணித்தவர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாகவும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

மேலும், இஸ்ரேல் குடியிருப்புகள் மீதும் ராணுவ டாங்கிகள் தாக்குதலை முன்னெடுத்துள்ளன. அக்டோபர் தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவம் முன்னெடுத்துள்ள விசாரணையில், தவறிழைக்கவில்லை என்றே அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் உயிர் தப்பிய இஸ்ரேலிய மக்கள் பலர் ராணுவத்தின் அறிக்கையை ஏற்க மறுத்துள்ளனர். மேலதிக தகவலுக்கு 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US