ஹமாஸ் படையினரின் நெற்றியில் முத்தமிட்ட இஸ்ரேல் பிணைக்கைதி
இஸ்ரேல் பிணைக்கைதி ஒருவர் தான் விடுவிக்கப்படும் போது ஹமாஸ் படையினரின் நெற்றியில் அன்பு முத்தமிடும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதை தொடர்ந்து பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேலும், இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் படையினரும் விடுவித்து வருகின்றனர்.
சமீபத்தில் ஒமர் ஷெம் டோவ் என்பவர் விடுவிக்கப்பட்டார், அப்போது ஹமாஸ் படையை சேர்ந்த இருவின் நெற்றியில் முத்தமிட்டார், இவர் 505 நாட்களாக ஹமாஸ் படையினரின் பிடியில் இருந்துள்ளார்.
உடல் மெலிந்த நிலையில் காணப்படும் ஒமர் ஷெம் டோவ், மிக உற்சாகத்துடன் இருப்பதாக அவரின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது மகன் அன்பானவன் என்றும், ஹமாஸ் படையினரின் அன்பையும் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார் ஒமரின் தாய்.
⚡️#BREAKING Israeli “hostage” kisses the forehead of 2 Hamas members pic.twitter.com/Icg6TDEyEQ
— War Monitor (@WarMonitors) February 22, 2025