காஸா மீது உக்கிர தாக்குதலால் உயிர் பயத்தில் இஸ்ரேல் பணயக்கைதிகளின் குடும்பத்தினர்
காஸா மீது தாக்குதலின் உக்கிரம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஹமாஸிடம் சிக்கியுள்ள பணயக்கைதிகளின் உறவினர்கள் அச்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விளக்கம் அளிக்க வேண்டும்
ஹமாஸ் படைகளால் சிறைபிடிக்கப்பட்டவர்களின் கதி குறித்து உடனடியாக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கோரியுள்ளது.
@afp
அக்டோபர் 7 தாக்குதலுக்கு பிறகு சுமார் 229 பேர்கள் கடத்தப்பட்டுள்ளதாக நம்பும் நிலையில், அவர்களின் உறவினர்கள் குழு அவசர சந்திப்பு ஒன்றை முன்னெடுக்க வேண்டும் எனவும் அரசாங்கத்தை முறையிட்டுள்ளனர்.
காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் உக்கிரமாக தாக்குதல் முன்னெடுத்துவரும் நிலையில், பிணைக்கைதிகளின் நிலை என்ன என்பது தொடர்பில் அரசு விளக்க வேண்டும் என கேட்டுள்ளனர்.
இதுவரை 50 பணயக்கைதிகள்
மட்டுமின்றி, தங்களின் தொடர் கோரிக்கைகளை இஸ்ரேல் அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
@reuters
இதனிடையே, வியாழக்கிழமை ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 50 பணயக்கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.
ஹமாஸ் படைகள் எல்லையைத் தாண்டி தொடுத்த தாக்குதலில் 1,400 இஸ்ரேலியப் பொதுமக்கள் கொல்லப்பட்டதில் இருந்து இஸ்ரேல் தரைவழிப் படையெடுப்புக்கு தயாராகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |