14 பேர் இல்லை,உயிரிழந்தவர்கள் 224 பேர்! இஸ்ரேல் தாக்குதலில் குறித்து ஈரான் தகவல்
ஈரானில் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளால், அந்நாட்டின் மருத்துவமனைகள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.
கடந்த நான்கு நாட்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 224 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், மெஹர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 1,277 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் பொதுமக்கள் என சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹொசைன் கெர்மன்பூர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கு மாறாக, இஸ்ரேலிய அதிகாரிகள் தங்கள் தரப்பில் 14 பேர் உயிரிழந்ததாகவும், 390 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |