ஹமாஸ் கடத்தி கொன்ற 19 வயது இளம் இஸ்ரேல் ராணுவ வீராங்கனை: உடலை மீட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு
ஹமாஸ் படையினரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட இஸ்ரேலிய ராணுவ வீராங்கனையின் உடல் காசாவில் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை (IDF) தெரிவித்துள்ளது.
பிணைக் கைதிகள் சிறைபிடிப்பு
இஸ்ரேல் மீது அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதலை தொடங்கினர்.
அத்துடன் காசாவின் அருகில் உள்ள இஸ்ரேலிய பகுதியில் நடைபெற்ற இசைக் கச்சேரியில் புகுந்து தாக்குதல் நடத்தியதோடு நூற்றுக்கணக்கானோரை பிணைக் கைதிகளாக பிடித்து சென்றனர்.
இதையடுத்து பாலஸ்தீனத்தின் மீது முழு நீளப் போரை இஸ்ரேலிய ராணுவ படை அறிவித்து தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
உடல் கண்டுபிடிப்பு
இந்நிலையில் அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலில் புகுந்து ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய பாதுகாப்பு படையை சேர்ந்த 19 வயது பெண்ணின் வீராங்கனையின் உடல் காசாவில் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை (IDF) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேலிய ராணுவம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இஸ்ரேலிய ராணுவ படையை சேர்ந்த 19 வயதான நோவா மார்சியானோ என்ற வீராங்கனை ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து தற்போது அவரது உடல் காசாவில் உள்ள ஷிஃபா மருத்துவமனைக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
நோவா மார்சியானோ குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், உறுதுணையாகவும் இருப்போம் என IDF தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |