இஸ்ரேலின் புதிய Barak Magen பாதுகாப்பு அமைப்பு - ஈரானின் ட்ரோன்கள் அழிப்பு
இஸ்ரேல், ஈரான் தாக்குதல்களுக்கு எதிராக முதன்முறையாக தனது புதிய ஏர் டிபென்ஸ் முறைமை பராக் மகேனை (Barak Magen) பயன்படுத்தியுள்ளது.
ஞாயிறு இரவு, ஈரானில் இருந்து வந்த 8 ட்ரோன்கள் இந்த புதிய பாதுகாப்பு முறையால் வெற்றிகரமாக அழிக்கப்பட்டன.
இந்த தாக்குதல் இஸ்ரேலின் Sa’ar 6 வகை கப்பலில் இருந்து நடைபெற்றது. பராக் மகேன் மற்றும் மற்றொரு long-range air defense interceptor-ஆல் இந்த ட்ரோன்கள் அழிக்கப்பட்டன.
பராக் மகேன் என்ன செய்கிறது?
பராக் மகேன் என்பது பலவகையான ஆபத்துகளை தடுக்கும் திறனுடைய மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பாகும் (Air defense system).
இது ட்ரோன்கள், க்ரூஸ் ஏவுகணைகள், உயர் பாதை ஏவுகணைகள், நிலத்திலிருந்து கடலுக்கு ஏவப்படும் ஏவுகணைகளிடமிருந்த்து வரும் தாக்குதல்களை தடுக்கிறது.
இந்த அமைப்பு இஸ்ரேல் கடற்படையை வலுப்படுத்துவதுடன், கிழக்கு மெடிடரேனியன் கடற்பகுதி மற்றும் முக்கிய எண்ணெய், வாயு மையங்களை பாதுகாக்கும். எனவே, இஸ்ரேலின் எல்லைகளை கடந்த தொலைதூர தாக்குதல்களுக்கும் இது தட்டுப்படும்.
கடந்த 4 நாட்களில் மட்டும் இஸ்ரேல் இந்த புதிய பாதுகாப்பு அமைப்பைக் கொண்டு 25 ட்ரோன்களை இடைமறித்து அழித்துள்ளதாக அறிவித்துள்ளது என Fox News கூறியுள்ளது.
சமீபத்திய நிலவரம்
ஈரான் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் தற்போது தெஹ்ரானை விமான கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும், அங்குள்ள 3.3 லட்சம் மக்களுக்கு வெளியேற அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Barak Magen air defense system, Israel Iran drone attack 2025, Israeli Navy missile defense, Iran Israel conflict latest, Sa’ar 6 missile ship defense, Barak Magen missile interceptor, Israel Mediterranean gas defense, Iran drones intercepted Israel